என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
துறைமுகம் தொகுதி திமுக எம்.எல்.ஏ சேகர்பாபுவுக்கு கொரோனா
சென்னை:
சென்னை துறைமுகம் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. சேகர்பாபுவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து சென்னை ஆயிரம்விளக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரியில் அவர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு டாக்டர்கள் சேகர்பாபு எம்.எல்.ஏ. வுக்கு சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
சென்னையில் தி.மு.க. சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளை சேகர்பாபு முன்னின்று நடத்தி வந்தார். சமீபத்தில் நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில் விவசாயிகளுக்கு எதிராக நடந்த ஆர்ப்பாட்டத்திலும் அவர் பங்கேற்றார்.
இந்தநிலையில் தான் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. தி.மு.க. நிகழ்ச்சிகளில் முக கவசம் அணிந்து பங்கேற்று வந்த நிலையிலும் சேகர்பாபுவுக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அரசியல் பிரமுகர்களுக்கு கொரோனா தொற்று தொடர்ந்து ஏற்பட்டு வருகிறது. இதற்கு முன்பும் எம்.பி., எம்.எல்.ஏ.க் கள் உள்ளிட்ட அரசியல் கட்சிகளை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. பலர் அதில் இருந்து மீண்டுள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்