என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வேளாண் சட்டங்களால் நன்மைகள் என்னென்ன? -தமிழகத்தில் மாவட்ட வாரியாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் பாஜக
Byமாலை மலர்4 Dec 2020 9:24 AM GMT (Updated: 4 Dec 2020 9:24 AM GMT)
விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் திருத்தச் சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
சென்னை:
சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் திருத்தச் சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளது. ஆனால் இதனை வைத்து திமுக அரசியல் செய்ய முயற்சிக்கிறது. தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைத்தும் அறிந்தவர்கள். பாஜக சார்பாக டிசம்பர் 8 ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெறும்.
கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தற்போது ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம்.
அதிமுகவுடன் தற்போது வரை கூட்டணி முடிவு செய்யப்படவில்லை. மத்திய பாஜக இதுகுறித்து உரிய முடிவெடுக்கும். தமிழகத்தில் திமுக வீழ்த்தப்பட வேண்டிய கட்சி. அதற்காக அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X