search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எல்.முருகன்
    X
    எல்.முருகன்

    வேளாண் சட்டங்களால் நன்மைகள் என்னென்ன? -தமிழகத்தில் மாவட்ட வாரியாக விழிப்புணர்வு கூட்டம் நடத்தும் பாஜக

    விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் திருத்தச் சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளதாக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னை தி.நகரில் உள்ள தமிழக பாஜக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் எல்.முருகன் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    விவசாயிகளின் நலனுக்காகவே வேளாண் திருத்தச் சட்டத்தை பாஜக கொண்டு வந்துள்ளது. ஆனால் இதனை வைத்து திமுக அரசியல் செய்ய முயற்சிக்கிறது. தமிழகத்தில் உள்ள விவசாயிகள் அனைத்தும் அறிந்தவர்கள். பாஜக சார்பாக டிசம்பர் 8 ஆம் தேதி முதல் மாவட்ட வாரியாக விழிப்புணர்வு கூட்டம் நடைபெறும்.

    கட்சி ஆரம்பிக்க உள்ளதாக தற்போது ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சியை தொடங்கலாம். 

    அதிமுகவுடன் தற்போது வரை கூட்டணி முடிவு செய்யப்படவில்லை. மத்திய பாஜக இதுகுறித்து உரிய முடிவெடுக்கும். தமிழகத்தில் திமுக வீழ்த்தப்பட வேண்டிய கட்சி. அதற்காக அனைவரையும் ஒருங்கிணைக்கும் பணிகள் தொடங்கிவிட்டன. தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×