search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "எல்.முருகன்"

    • பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும்.
    • கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும்.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் எல்.முருகன் மேட்டுப்பாளையம் அருகே உள்ள வெள்ளியங்காடு பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    பிரதமர் மோடி ஏழை-எளிய மக்களுக்காக பல்வேறு நல்ல திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். நம்மை 70 ஆண்டுகள் ஆட்சி செய்த தி.மு.க-அ.தி.மு.க கட்சிகள் இன்னும் அடிமையாக வைத்திருக்கிறார்கள். அதிலும் குறிப்பாக பட்டியலின மக்கள் அடிப்படை வசதிகளுக்குகூட கையேந்தும் நிலையில்தான் உள்ளனர்.

    ஆனால் பிரதமர் மோடி அனைவருக்கும் வீடு கட்டும் திட்டம், இலவச கியாஸ் இணைப்பு மற்றும் பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி உள்ளார்.

    மத்திய அரசின் ஜல்ஜீவன் திட்டத்தின்கீழ் அனைத்து பொதுமக்களுக்கும் தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால் தமிழகத்தில் தி.மு.க மற்றும் அ.தி.மு.க.வை சேர்ந்த ஒருசிலர் ஜல்ஜீவன் திட்டத்தில் குடிநீர் இணைப்பு கொடுக்க லஞ்சம் கேட்டு மிரட்டுவதாக சொல்கிறார்கள். ஏழை மக்களுக்கு தரப்படும் தண்ணீரில் யாராவது கைவைத்தால், அவர்கள் ஜூன் மாதத்திற்கு பிறகு சிறைக்கு செல்வது உறுதி.

    இந்த பகுதியின் வனவிலங்கு பிரச்சனை நிரந்தர தீர்வு காணப்படும். மேலும் பில்லூர் அணை தூர்வாரப்பட்டு, அங்குள்ள வண்டல் மண் விவசாயிகளுக்கு தரப்படும். கேரளா-தமிழகம் இணைப்புச்சாலை அமைக்கப்படும். ஏழை, எளிய மக்கள் வசிக்கும் குறிப்பாக அருந்ததியர்கள் வசிக்கும் பகுதிகளில் மயான வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போர்க்கால அடிப்படையில் செய்து தரப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை.
    • தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும்.

    ஊட்டி:

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தேசிய ஜன நாயக கூட்டணி சார்பில் மத்திய மந்திரி எல்.முருகன் போட்டியிடுகிறார். அவர் இன்று காலை ஊட்டியில் உள்ள பாஜனதா அலுவலகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    நீலகிரி தொகுதியில் பா.ஜனதாவின் வெற்றி என்பது உறுதியாகி விட்டது. அதுவும் பிரதமர் பிரசாரத்திற்கு வந்து சென்ற பின்னர் இங்கு பா.ஜ.க மிகப்பெரிய வித்தியாசத்தில் வெற்றி பெறும் என்று உறுதியாகி விட்டது. 4 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் தொகுதியாக இது இருக்கும்.

    10 ஆண்டுகளாக எம்.பியாக இருந்த ஆ.ராசா, நீலகிரிக்கு என எந்த திட்டங்களையுமே செயல்படுத்தவில்லை. நீலகிரியில் உள்ள மக்கள் மீது அவருக்கு எந்தவித அக்கறையும் இல்லை. அவர்களை பற்றியும் அவர் கவலைப்படுவதோ அல்லது இங்குள்ளவர்களை சிந்திப்பதோ கிடையாது.

    ஆ.ராசா நீலகிரி தொகுதியில் எந்த பகுதிக்கு பிரசாரத்திற்கு சென்றாலும் அவருக்கு மக்கள் மத்தியில் எதிர்ப்பு எழுகிறது. சில தினங்களுக்கு முன்பு கூட குன்னூர் பகுதியில் பிரசாரத்திற்கு சென்றுள்ளார். அப்போது, அங்கிருந்தவர்கள் இங்கு நீங்கள் பிரசாரத்திற்கு வர வேண்டாம் என கூறி அங்கிருந்து போக சொல்லி விட்டனர். அந்தளவுக்கு ஆ.ராசா மீது மக்கள் கோபத்தில் இருக்கிறார்கள். இவர் பெண்கள், கடவுள்கள் பற்றி அவதூறு பேசி வருகிறார்.

    2009-ம் ஆண்டு முதல் இங்கு போட்டியிட்டுள்ள ஆ.ராசா இதுவரை தனது வாக்காளர் அடையாள அட்டையை கூட நீலகிரி தொகுதிக்கு மாற்றவில்லை. சமூகநீதி பற்றி பேசுவதற்கு தி.மு.கவுக்கோ, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கோ எந்த தகுதியும் இல்லை.

    அருந்ததியர் மக்களுக்கு என்று உள்ள தனி தொகுதி நீலகிரி. அந்த தொகுதியில் கூட, அருந்ததியர் வேட்பாளருக்கு தி.மு.க.வினர் இடம் அளிக்கவில்லை. அப்படி இருக்கையில் சமூக நீதி பற்றி பேச இவர்களுக்கு என்ன அருகதை இருக்கிறது.

    நீலகிரி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவர் ஒரு சார்பாக நடந்து கொள்கிறார். இதுபற்றி பா.ஜனதா சார்பில் தேர்தல் ஆணையத்தில் புகார் கொடுக்கப்படும். 24 மணி நேரமும் பறக்கும் படையினர், தேர்தல் அதிகாரிகள் என்னையே கண்காணிப்பு கேமராவுடன் சுற்றி சுற்றி வருகிறார்கள். ஆனால் ஆ.ராசாவை அவர்கள் கண்டு கொள்வதே கிடையாது. அவரின் வாகனத்தை கூட பறக்கும் படையினர் முறையாக சோதிப்பது கிடையாது.

    தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியாயமாக நடந்து கொள்ள வேண்டும். அது யாராக இருந்தாலும் சரி. தங்கள் மீது குறை சொல்லா அளவுக்கு நடந்து கொள்ள வேண்டும். ஆனால் இங்கு நடக்கும் சம்பவங்களை பார்க்கும் போது அப்படி தெரியவில்லை.

    இங்குள்ள தேர்தல் அதிகாரிகள் பலர் தி.மு.க.வின் மாவட்ட செயலாளர்கள் போல செயல்படுகிறார்கள். இன்னும் சிலர் மேட்டுப்பாளையத்தில் உள்ள ஆ.ராசாவின் வீட்டில் வேலை பார்க்கும் ஆளாகவே செயல்படுகின்றனர். ஆ.ராசா என்ன சொன்னாலும் கேட்பவர்களாக தேர்தல் நடத்தும் அதிகாரிகள் இருக்கின்றனர். இப்படி இருக்கும் பட்சத்தில் எப்படி தேர்தல் நியாமாக நடக்கும் என்று சொல்ல முடியும். பிரதமரின் நிகழ்ச்சிக்கு அனுமதி கேட்டபோது கூட சான்றிதழ்கள் கேட்டு அலைக்கழித்தனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.
    • பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது.

    மேட்டுப்பாளையம்:

    நீலகிரி தொகுதியில் போட்டியிடும் பாரதிய ஜனதா வேட்பாளர் எல்.முருகன், அன்னூர் பகுதியில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

    கரியாக்கவுண்டனூர் கிராமத்தில் தி.மு.க.வைச் சேர்ந்த தொண்டர் பழனிசாமி என்பவர் டீக்கடை நடத்தி வருகிறார். அவர் தனது கடைக்கு தேநீர் அருந்த வருமாறு எல்.முருகனுக்கு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று எல்.முருகன் அந்த கடைக்கு சென்று டீ குடித்தார். சிறிது நேரம் டீக்கடைக்காரருடன் உரையாடி விட்டு தேநீருக்கு உரிய காசை கொடுத்து விட்டு அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். பின்னர் டீக்கடை முன்பு கூடியிருந்த பொதுமக்களிடம் தாமரை சின்னத்துக்கு அவர் வாக்கு சேகரித்தார்.

    தொடர்ந்து மத்திய மந்திரி எல். முருகன் அன்னூர் வடக்கு ஒன்றியத்திற்குட்பட்ட குன்னத்தூ ராம்பாளையம், கஞ்சப் பள்ளி, அல்லப்பாளையம், அ.மேட்டுப்பாளையம், பசூர், பட்டக்காரன்புதூர், மூக்கனூர், குப்பனூர், அக்கரை செங்கப்பள்ளி, கணுவக்கரை, ஆம்போதி உள்ளிட்ட பகுதிகளில் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    மத்திய அரசு சார்பில் கிராமப்புற மக்களுக்கு உஜ்வாலா திட்டத்தில் ரூ.400 மானியத்தில் விலையில்லா எரிவாயு இணைப்புகள் அதிக அளவில் வழங்கப்பட்டுள்ளது. பால் உற்பத்தியாளர்களுக்கு கிசான் கடன் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் தி.மு.க.அரசு விவசாயிகளை ஒழிக்க வேண்டும், அவர்களது வாழ்வாதாரத்தை கெடுக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு ஆண்டு தோறும் முப்பொழுதும் விளையும் நிலங்களை தாரை வார்க்க முயற்சி செய்கிறது. இதனை எதிர்த்து பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் போராட்டம் நடத்தப்பட்டு தடுக்கப்பட்டது. அன்னூரில் சிப்காட் அமைக்க தி.மு.க. மீண்டும் முயற்சித்தால் பா.ஜ.க. சார்பில் ஒவ்வொரு தொண்டரும் தனது உயிரை கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது
    • முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் அத்தனை முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார்

    சென்னை சத்தியமூர்த்தி பவனில், தீரர் சத்தியமூர்த்தியின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது புகைப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்வு இன்று நடைபெற்றது.

    அதன் பின் செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, "தேர்தலில் போட்டியிட பணமில்லை என நிர்மலா சீதாராமன் சொல்கிறார். நிதியமைச்சர் நிர்மலா சீதாரமனை விட, தமிழிசை மற்றும் எல்.முருகனிடம் அதிக பணம் உள்ளதா? வெயிலில் சுத்தாமல் எந்தவித சிரமமும் இல்லாமல் ஆட்சி அதிகாரத்தை அனுபவிப்பதற்கு நிர்மலா சீதாராமன் மற்றும் ஜெய்சங்கர் ஆகியோர் ஆசைப்படுகிறார்கள்.

    கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் விவகாரத்தில் பிரதமர் சொல்வதைத்தான் தேர்தல் ஆணையம் அறிவிக்கிறது. முதற்கட்ட தேர்தல் தமிழ்நாட்டில் வரும் என்பது தெரிந்து தான் பிரதமர் பல முறை தமிழ்நாட்டிற்கு வந்து சென்றுள்ளார். மோடி தேர்தல் ஆணையம், அமலாக்கத்துறை, சிபிஐ, வருமான வரித்துறை உள்ளிட்ட மத்திய அரசின் அமைப்புகளை நம்பியே உள்ளார். ஆனால் நாங்கள் மக்களை நம்பி உள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

    • நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார்
    • நீலகிரி தொகுதியில் எல். முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்

    நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க. சார்பில் ஆ.ராசா வேட்பாளராக அறிவிக்கப்பட்டு உள்ளார். ஏற்கனவே இவர் 2 முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்று பாராளுமன்ற உறுப்பினராக உள்ளார். கடந்த பல மாதங்களுக்கு முன்பே தேர்தல் பணியை தொடங்கி களப்பணியாற்றி வருகிறார்.

    இந்நிலையில் அ.தி.மு.க. சார்பில் நீலகிரி தொகுதி வேட்பாளராக லோகேஷ் தமிழ்ச்செல்வன் அறிவிக்கப்பட்டு உள்ளார். இவர் முன்னாள் சபாநாயகர் ப.தனபாலின் மகன் ஆவார். இவர் அ.தி.மு.க. தொழில்நுட்ப பிரிவில் பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.

    இவருக்கு முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர்., தமிழ்ச்செல்வன் என்ற பெயரை வைத்துள்ளார். இவரது திருமணத்தை முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா நடத்தி வைத்துள்ளார்.

    இந்நிலையில், தற்போது பாஜகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியாகியுள்ளது. அதில், நீலகிரி தொகுதியில் எல். முருகன் மீண்டும் போட்டியிடுகிறார்.

    இதனால் நீலகிரி தொகுதியில் போட்டி கடுமையாகியுள்ளது. அவ்வகையில் ஆ. ராசா, எல். முருகன் மற்றும் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு இடையே மும்முனை போட்டி உருவாகியுள்ளது. 

    • மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார்.
    • மேல்சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக் காலம் 3 ஆண்டுக்களுக்கு ஒரு முறை நிறைவடையும்.

    புதுடெல்லி:

    மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாக தமிழகத்தை சேர்ந்த எல்.முருகன் பதவி வகித்து வருகிறார். அவர் கடந்த 2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி மத்திய இணை மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். அவர் ஏற்கெனவே மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து பாராளுமன்ற மேல்சபை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டு மத்திய இணை மந்திரியாக பொறுப் பேற்றுக் கொண்டார்.

    பாராளுமன்ற மேல்சபையில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்களின் பதவிக்காலம் 3 ஆண்டுக்களுக்கு ஒரு முறை நிறைவடையும். அவ்வாறு நிறைவடையும் உறுப்பினர்களின் பதவிகளுக்கு அவ்வப்போது மத்திய தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்துகிறது. அதன்படி இந்த ஆண்டு 68 எம்.பி.க்களின் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. அதன் அடிப்படையில் மத்திய மந்திரி எல்.முருகனின் பதவிக்காலமும் இந்த ஆண்டு முடிவடைகிறது.

    இதையடுத்து புதிய மேல்சபை எம்.பி.க்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை மத்திய தேர்தல் ஆணையம் வருகிற 27-ந் தேதி நடத்துகிறது. அன்றைய தினமே வாக்குகள் எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் பாராளுமன்ற மேல்சபை எம்.பி. பதவிக்கான தேர்தலில் மத்தியபிரதேசம் மற்றும் ஒடிசாவில் இருந்து போட்டியிடும் 5 வேட்பாளர்களின் பெயர் பட்டியலை பா.ஜனதா கட்சி இன்று வெளியிட்டுள்ளது. இந்த வேட்பாளர் பட்டியலில் மத்திய மந்திரி எல்.முருகன் பெயரும் இடம் பெற்றுள்ளது. அவர் மீண்டும் மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து போட்டியிட்டு மேல்சபை எம்.பி. ஆகிறார்.


    இதேபோல் மத்திய ரெயில்வே மந்திரி அஸ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து மேல்சபை எம்.பி. பதவிக்கு போட்டியிடுகிறார். மேலும் மத்தியபிரதேச பிரதேசத்தில் இருந்து உமேஷ் நாத் மஹராஜ், மாயா நரோ லியா, பன்சிலால் குர்ஜார் ஆகியோரும் பா.ஜ.க. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

    மந்திய மந்திரி எல்.முருகன் 1977-ம் ஆண்டு மே மாதம் 29-ந்தேதி பிறந்தார். அவரது சொந்த ஊர் நாமக்கல் மாவட்டம், பரமத்தியை அடுத்த கோனூர் ஆகும். 15 ஆண்டுகள் வழக்கறிஞராக அனுபவம் கொண்ட இவர், சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றினார்.

    2011-ம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில், ராசிபுரம் தொகுதியில் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு 3 வது இடத்தை பெற்றார். 2014-ம் ஆண்டு சென்னை ஐகோர்ட்டில் இந்திய அரசுக்கான நிலை ஆலோசகராக பணிபுரிந்தார். 2017 முதல் 2019 வரை தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணைய துணைத் தலைவராகவும் இருந்தார்.

    அதன் பிறகு கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 11-ந்தேதி தமிழக பா.ஜனதா கட்சியின் தலைவராக எல்.முருகன் நியமிக்கப்பட்டார். 2021-ம் ஆண்டு ஜூலை 7-ந்தேதி வரை அவர் அப்பதவியில் இருந்தார். 2021-ம் ஆண்டு தமிழக சட்டசபை தேர்தலில், தாராபுரம் தொகுதியில் எல்.முருகன் பா.ஜ.க. வேட்பாளராக போட்டியிட்டு, தி.மு.க. வேட்பாளர் என்.கயல்விழியிடம் 1,393 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார்.

    2021-ம் ஆண்டு ஜூலை மாதம் 7-ந்தேதி மத்திய மந்திரி சபை மாற்றியமைக்கப்பட்டது. அப்போது எல்.முருகன் மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை, மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை இணை மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார்.

    இந்த நிலையில் அவரது மேல்சபை எம்.பி. பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில் அவர் மீண்டும் மத்தியபிரதேசத்தில் இருந்து போட்டியிட்டு மேல்சபை எம்.பி. ஆகிறார்.

    • விவசாயிகளை போல மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது.
    • இறால் ஏற்றுமதியில் இந்தியா முதல் இடத்தில் உள்ளது.

    சென்னை ராயபுரத்தில் அமைந்துள்ள மத்திய மீன்துறை கடல்சார் - பொறியியல் பயிற்சி நிலையத்தை மத்திய மீன் வளத்துணை இணை மந்திரி எல்.முருகன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அந்த நிறுவனத்தின் மீன் அளவை ஆராய்ச்சி கப்பலில் சென்று பார்வையிட்டார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:

    2014 ஆண்டு பிரதமர் நரேந்திர மோடி பதவி ஏற்றது முதல் 2019 ஆம் ஆண்டு வரை 5 ஆண்டுகளில் தூய்மை இந்தியா திட்டத்தில் முதல் கட்டத்தின்படி பள்ளிகள் மற்றும் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டன. கடந்த அக்டோபர் இரண்டாம் தேதி முதல் இரண்டாவது கட்டமாக தூய்மை பாரதம் திட்டம் 2.0 நடைபெற்று வருகிறது. 


    இதன்படி அனைத்து அரசு அலுவலகங்களிலும் தேவையற்ற கோப்புகள் நீக்கப்பட்டு, துப்புரவு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பிரதமரின் விரைவுசக்தி திட்டத்தின் கீழ் மீனவள மேம்பாடு இணைக்கப்பட்டுள்ளது. இதன்படி சென்னை காசிமேடு துறைமுகம் உள்பட இந்தியாவில் ஐந்து துறைமுகங்கள் நவீனப்படுத்தப்படுகிறது.

    மீன்பிடி மற்றும் மீன் வளர்ப்பு உள்கட்டமைப்பு நிதியில் தமிழகத்திற்கு மட்டும் சுமார் 1800 கோடி ருபாய் வழங்கப்பட்டுள்ளது. திருவொற்றியூரில் சூரை மீன்களுக்கென ஒரு துறைமுகம், செங்கல்பட்டு விழுப்புரம் மாவட்டம் இடையே ஒரு துறைமுகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    விவசாயிகளை போல மீனவர்களுக்கும் கடன் அட்டை வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா காலத்திலும் 32 சதவீத மீன் ஏற்றுமதி நடந்துள்ளதாக தெரிவித்தார். மீன் ஏற்றுமதியில் 2 வது இடத்திலும், இறால் ஏற்றுமதியில் முதல் இடத்திலும் இந்தியா உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

    • தேச முன்னேற்றத்திற்காக ஒவ்வொரு இந்தியரும் பாடுபட வேண்டும்.
    • இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும்.

    விடுதலையின் அமிர்த பெருவிழாவின் ஒரு பகுதியாக நாமக்கல்லில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழகத்தின் அறியப்படாத இந்திய சுதந்திரப் போராட்ட வீரர்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி திறந்து வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: 


    அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கை, அனைவரின் முயற்சி என்ற தாரக மந்திரத்தோடு அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவை வல்லரசு நாடாக உயர்த்த அனைவரும் ஒன்றிணைந்து கடுமையாக உழைக்க வேண்டும். 2047-இல் நூற்றாண்டு சுதந்திர ஆண்டைக் கொண்டாடும்போது, இந்தியா உலக நாடுகளுக்கு முன்னோடியாகத் திகழ வேண்டும். வரவிருக்கும் 25 ஆண்டுகள் நாட்டின் வளர்ச்சிக்கான முக்கிய ஆண்டுகளாகக் கருதப்படுகிறது.

    தற்சார்பு இந்தியாவிற்காக முதலில் குரல் கொடுத்து ஆங்கிலேயர்களை எதிர்த்து சொந்தக் கப்பலை நிறுவியவர் சுதந்திரப் போராட்ட வீரர் வ. உ. சிதம்பரனார். அவரது பாதையைப் பின்பற்றி பிரதமர் நரேந்திர மோடி தற்சார்பு இந்தியாவிற்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.

    முற்றிலும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ராந்த் அண்மையில் கப்பற்படை பணியில் சேர்க்கப்பட்டதும், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா தடுப் பூசிகளும் தற்சார்பு இந்தியா முன் முயற்சிக்கு மேலும் வலு சேர்க்கின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    • மத்திய அரசின் சஞ்ஜீவன் திட்டத்தின் கீழ் 2025க்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும்.
    • முதல்-அமைச்சர் அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

     திருப்பூர் :

    திருப்பூரில் இன்று பின்னலாடை துறையினருடன் மத்திய அமைச்சர் எல்.முருகன் கலந்துரையாடினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- திருப்பூர் இந்தியாவின் முக்கிய ஊர். இந்தியாவின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. தொழிலாளர்கள் நலன்கருதி 80 கோடி மதிப்பில் 100 படுக்கை கொண்ட இ.எஸ்.ஐ மருத்துவமனை மே 23-ந்தேதி பணி முடிவடைய இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தொழிலாளர்களுக்கு உயர் சிகிச்சை கிடைக்கும். பஞ்சாயத்து தலைவர்கள் தான் அரசின் திட்டங்களை நடைமுறை படுத்துபவர்கள். அவர்களுடன் இன்று சந்தித்தது மகிழ்ச்சி அளிக்கிறது.

    மத்திய அரசின் சஞ்ஜீவன் திட்டத்தின் கீழ் 2025க்குள் அனைத்து கிராம வீடுகளுக்கும் குடிநீர் இணைப்பு கொடுக்கப்படும். சின்னேரிபாளையம் பஞ்சாயத்து சுகாதாரத்திற்கு சிறந்த விருது பெற்றுள்ளது. அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளேன்.

    தமிழகத்தின் முதல்-அமைச்சர் அனைவருக்கும் சொந்தமானவர். அனைத்து தரப்பு மக்களையும் ஒரே கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும். மற்றவர்கள் பண்டிகைக்கு நேரில் சென்று கொண்டாடி வாழ்த்து பரிமாறுவதை வழக்கமாக கொண்டுள்ளார். ஆனால் இந்துக்கள் பண்டிகைக்கு வாழ்த்து சொல்லாதததை மக்கள் ஏன் என கேட்கிறார்கள். தேர்தலுக்காக வேல் ஏந்தி வாக்கு சேகரித்தார். ஆனால் தற்போது விநாயகர் சதுர்த்தி வாழ்த்து தெரிவிக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. தி.மு.க. தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும்.

    சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு என்பது ஒப்பந்தம் அடிப்படையில் நடைபெற்று வருகிறது.சுதந்திர போராட்ட வீரர்களை போற்ற வேண்டும் .எனவே திருப்பூர் பேருந்து நிலையத்திற்கு தியாகி திருப்பூர் குமரன் பெயரை வைத்தால் நன்றாக இருக்கும்.ராகுல் காந்தி நடைப்பயணம் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தபோவது இல்லை. கொரோனாவிற்கு பிறகு வளர்ந்த நாடுகள் கூட சிக்கி தவிக்கிறது. ஆனால் இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக உயர்ந்து வருகிறது.

    சட்டம் ஒழுங்கை பராமரிக்கும் பொறுப்பு அந்தந்த மாநிலங்களை சார்ந்தது. தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு அதிகரித்துள்ளது. அதனை தடுக்க திட்டமிடலுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆளுநருக்கு தனி அதிகாரம் உள்ளது. அதன்படி அவர்கள் பணி செய்கிறார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.  

    • கடந்த 8 ஆண்டுகளில் நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது.
    • பல திட்டங்கள் மூலமாக மக்களின் வாழ்க்கை தரம் மேம்பட்டுள்ளது.

    சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவரின் 307 வது பிறந்த தினத்தை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்சேவலில் உள்ள அவரது திரு உருவச் சிலைக்கு மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன் மரியாதை செய்தார்.

    அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் பூலித்தேவரை கெளரவிக்கும் விதமாக தபால் தலை வெளியிட அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும் என்று கூறினார். 


    முன்னதாக தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடையே பேசிய அவர், 2047- ஆண்டில் இந்தியா வல்லரசாக மாற வேண்டும் என்ற இலக்கோடு நாட்டில் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்த வேண்டியது அவசியம் என்றார். அந்த வகையில் தமிழகத்தில் எட்டு வழி சாலை திட்டம் செயல்படுத்த இருப்பதை வரவேற்பதாக அவர் தெரிவித்தார்.

    மேலும், 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை கடந்த 8 ஆண்டுகளில் நாடு பல்வேறு வகையில் வளர்ச்சி அடைந்துள்ளது, அனைவருக்கும் வீடு திட்டம், குழாய் மூலம் குடிநீர் திட்டம் ஆகிய பல திட்டங்கள் மூலமாக மக்களின் வாழ்க்கை தரம் மேம்படுத்தப்படுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

    • சென்னை கோயம்பேடு இல்லத்தில் எல்.முருகன் விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினார்
    • அரசியலுக்காக வெளியில் பேசுவதுதான் திமுகவின் வாடிக்கை என்று விமர்சனம்

    சென்னை:

    மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சென்னை கோயம்பேடு இல்லத்தில் இன்று தனது குடும்பத்தினருடன் இணைந்து விநாயகர் சதுர்த்தி விழாவைக் கொண்டாடினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது, தேசிய கல்விக்கொளகையில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என மத்திய கல்வித்துறை இணையமைச்சர் சுபாஷ் சர்கார் கூறியது குறித்தும், தேசியக் கல்விக் கொள்கை எதிர்ப்பில் தமிழ்நாடு அரசு உறுதியாக இருப்பதாக தமிழக முதல்வர் பேசியது குறித்தும் கேள்வி எழுப்பப்பட்டது.

    இதற்கு பதிலளித்த எல்.முருகன், சில நேரங்களில் பேசவேண்டிய இடத்தில் எதையும் பேசமாட்டார்கள், அரசியலுக்காக வெளியில் வந்து பேசுவதுதான் திமுகவின் வாடிக்கையாக இருக்கிறது என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு, என்றார்.

    • மலைக் கிராமங்களில் மக்கள் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.
    • அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களின் நினைவிடத்தில் மரியாதை.

    நாட்டின் 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, கோவை விவேகானந்தா கேந்திரா சார்பில், கோவையில் உள்ள நவ இந்தியா பகுதியில் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கற்ற சுதந்திர ஓட்டத்தை மத்திய தகவல் ஒலிபரப்புத்துறை இணை மந்திரி எல்.முருகன், தொடங்கி வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியுள்ளதாவது:

    இன்று முதல் 15-ந் தேதி வரை, நாட்டு மக்கள் அனைவரும், இல்லந்தோறும் மூவண்ணக் கொடியேற்ற வேண்டுமென பிரதமர் திரு.நரேந்திர மோடி விடுத்த வேண்டுகோளை ஏற்று, இதுகுறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, கடந்த 10 நாட்களாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 


    காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை உள்ள மக்கள் அனைவரும், தத்தமது வீடுகளில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர். மலைக் கிராமங்களில் உள்ள மக்களும், தாமாக முன்வந்து அவரவர் இல்லங்களில் தேசியக் கொடியை ஏற்றி வருகின்றனர்.

    வீரபாண்டிய கட்டபொம்மன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, மகாகவி பாரதியார் போன்ற ஏராளமான சுதந்திரப் போராட்ட வீரர்களைக் கொண்ட மாநிலம் தமிழகம்.

    இவர்கள் தவிர, அறியப்படாத சுதந்திரப் போராட்ட வீரர்களையும் நினைவுகூர்ந்து அவர்களின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது. தியாகிகளின் வாரிசுகளும் கவுரவிக்கப்பட்டு வருகின்றனர்.

    சர்வதேச அரங்கில் வளர்ந்து வரும் நாடாக உள்ள இந்தியா, நாட்டின் 100-வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள 2047-ம் ஆண்டுக்குள், முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் கனவு கண்டதைப் போன்று வல்லரசு நாடாக மாறும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    ×