என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கூடலூரில் மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலி
Byமாலை மலர்30 Nov 2020 12:13 PM GMT (Updated: 30 Nov 2020 12:13 PM GMT)
கூடலூர் அருகே மின்சாரம் பாய்ந்து தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கூடலூர்:
கூடலூர் 12-வது வார்டு பொம்மஜ்ஜியம்மன் கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் மூர்த்தி (வயது 27). வெல்டிங் தொழில் செய்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணமாகவில்லை. நேற்று இவர் காய்கறி மார்க்கெட் அருகே உள்ள பொம்மைய சாமி கோவிலில் திருக்கார்த்திகை விழாவையொட்டி வெல்டிங் பணி செய்து கொண்டிருந்தார்.
அப்போது கோவிலில் அலங்கரிக்கப்பட்டிருந்த வண்ண விளக்கு உடைந்தது. இதில் மின்சார வயர் அறுந்து விழுந்ததில் அவர் மீது மின்சாரம் பாய்ந்தது. உடனே அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கம்பம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி மூர்த்தி பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து கூடலூர் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துமணி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X