search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திசையன்விளை அருகே வியாபாரி காரில் கடத்தல்- புதுமாப்பிள்ளை உள்பட 7 பேர் கைது

    திசையன்விளை அருகே தகராறில் வியாபாரியை காரில் கடத்தி சென்ற புதுமாப்பிள்ளை உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    திசையன்விளை:

    தூத்துக்குடி மாவட்டம் பனைவிளையை சேர்ந்தவர் மால்நாடார். இவரது மகன் கோபால் (வயது 30). இவருக்கும், திசையன்விளை அருகே உள்ள முத்தம்மாள்புரத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 20-ந் தேதி திருமணம் நடந்தது. அப்போது கறி விருந்து பரிமாறுவது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மாலையில் பனைவிளையில் நடந்த வரவேற்பு விழாவிலும் தகராறு ஏற்பட்டுள்ளது.

    இந்த முன்விரோதம் காரணமாக மால்நாடார், புது மாப்பிள்ளை கோபால், அவரது அண்ணன் சிவராமகிருஷ்ணன், உறவினர் நாராயணன், சதீஸ்குமார், ஆயன்குளம் கண்ணன், ஜெகன் ஆகிய 7 பேரும் மன்னார்புரம் சந்திப்பில் உள்ள முத்தம்மாள்புரத்தை சேர்ந்த நேசமணி மகன் ராஜ்குமார் (28) கடைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்த பொருட்களை சூறையாடிவிட்டு ராஜ்குமாரை புது மாப்பிள்ளை உள்பட 7 பேரும் காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது. 

    இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை மீட்டனர். கோபால் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    Next Story
    ×