என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திசையன்விளை அருகே வியாபாரி காரில் கடத்தல்- புதுமாப்பிள்ளை உள்பட 7 பேர் கைது
Byமாலை மலர்25 Nov 2020 1:50 PM GMT (Updated: 25 Nov 2020 1:50 PM GMT)
திசையன்விளை அருகே தகராறில் வியாபாரியை காரில் கடத்தி சென்ற புதுமாப்பிள்ளை உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
திசையன்விளை:
தூத்துக்குடி மாவட்டம் பனைவிளையை சேர்ந்தவர் மால்நாடார். இவரது மகன் கோபால் (வயது 30). இவருக்கும், திசையன்விளை அருகே உள்ள முத்தம்மாள்புரத்தை சேர்ந்த பெண்ணுக்கும் கடந்த 20-ந் தேதி திருமணம் நடந்தது. அப்போது கறி விருந்து பரிமாறுவது தொடர்பாக இரு வீட்டாருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மாலையில் பனைவிளையில் நடந்த வரவேற்பு விழாவிலும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இந்த முன்விரோதம் காரணமாக மால்நாடார், புது மாப்பிள்ளை கோபால், அவரது அண்ணன் சிவராமகிருஷ்ணன், உறவினர் நாராயணன், சதீஸ்குமார், ஆயன்குளம் கண்ணன், ஜெகன் ஆகிய 7 பேரும் மன்னார்புரம் சந்திப்பில் உள்ள முத்தம்மாள்புரத்தை சேர்ந்த நேசமணி மகன் ராஜ்குமார் (28) கடைக்குள் அத்துமீறி நுழைந்தனர். அங்கிருந்த பொருட்களை சூறையாடிவிட்டு ராஜ்குமாரை புது மாப்பிள்ளை உள்பட 7 பேரும் காரில் கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜ்குமாரை மீட்டனர். கோபால் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X