என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "புதுமாப்பிள்ளை கைது"
- புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என புதுமாப்பிள்ளையின் உறவினர்கள் பஞ்சாயத்து கூட்டி பணம் பெற்று தருவதாக கூறி மூடி மறைக்க பார்த்தனர்.
- புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என புதுமாப்பிள்ளையின் உறவினர்கள் பஞ்சாயத்து கூட்டி பணம் பெற்று தருவதாக கூறி மூடி மறைக்க பார்த்தனர்.
திருப்பதி:
ஆந்திரா மாநிலம், கோண சீமா மாவட்டம், கத்ரேணி கோனா பகுதியை சேர்ந்தவர் 20 வயது வாலிபர். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் கடந்த மாதம் திருமணம் நடந்தது.
அன்று இரவு புதுமாப்பிள்ளை பெண்ணுக்கு முதல் இரவு ஏற்பாடு செய்தனர். முதலில் அறைக்கு சென்ற மாப்பிள்ளை தனது மனைவியுடன் தனிமையில் இருக்கும் காட்சிகளை வீடியோ எடுக்க முடிவு செய்தார். இதற்காக தனது செல்போனில் வீடியோ ஆன் செய்து கட்டில் படுக்கை தெளிவாக தெரியும்படி வைத்தார்.
அன்று இரவு அவர்களுக்கு முதல்இரவு நடந்தது. புதுமாப்பிள்ளை ஏற்கனவே திட்டமிட்டபடி தனது மனைவியுடன் இருந்த முதல் இரவு காட்சிகளை தனது செல்போனில் வீடியோவாக பதிவு செய்தார்.
பின்னர் பதிவு செய்யப்பட்ட முதல் இரவு காட்சிகளை தனது நண்பர்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் பரவவிட்டார். இந்த வீடியோவை சமூக வலைத்தளங்களில் கண்டவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இதுகுறித்து சிறுமியின் பெற்றோருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுமியின் தாய் அங்குள்ள மகளிர் போலீசில் புகார் செய்தார்.
புகாரை வாபஸ் வாங்க வேண்டும் என புதுமாப்பிள்ளையின் உறவினர்கள் பஞ்சாயத்து கூட்டி பணம் பெற்று தருவதாக கூறி மூடி மறைக்க பார்த்தனர். ஆனால் சிறுமியின் தாய் புகாரை வாபஸ் பெற முடியாது என கூறிவிட்டார்.
இதையடுத்து போலீசார் வாலிபர் மீது போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்து ஜெயிலில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்