search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வானதி சீனிவாசன்
    X
    வானதி சீனிவாசன்

    தமிழகத்தில் பா.ஜ.க. கூட்டணி ஆட்சி மலர்ந்தே தீரும்- வானதி சீனிவாசன் பேட்டி

    தமிழகத்தில் பாஜக கூட்டணி ஆட்சி மலர்ந்தே தீரும் என்று பாஜனதா மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.

    சென்னை:

    மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா வருகை மற்றும் நிர்வாகிகளுக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுத்தது பா.ஜனதாவினர் மத்தியில் புதுதெம்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    பாஜனதா மகளிர் அணி தேசிய தலைவி வானதி சீனிவாசனிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:-

    அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி உறுதிபடுத்தப்பட்டுள்ளது. அடுத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்கான பணிகளை தொடங்கப்போகிறோம்.

    கூட்டணி ஆட்சி என்பது எங்கள் ஆசை. கூட்டணி ஆட்சி அமைக்க தேவையான எம்.எல்.ஏ.க்களை வெற்றி பெற செய்வதே எங்கள் இலக்கு.

    நிச்சயமாக அதிகமான தொகுதிகளில் வெற்றி பெற்று புறக்கணிக்க முடியாத சக்தியாக பா.ஜனதா இருக்கும். அந்த வகையில் கூட்டணி ஆட்சி மலரும் என்ற நம்பிக்கை உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தமிழகத்தில் கூட்டணி ஆட்சிதான் என்று பா.ஜனதா தலைவர்கள் பேசி வரும் நிலையில் வானதி சீனிவாசன் மீண்டும் அதை உறுதிப்படுத்தி இருக்கிறார்.

    Next Story
    ×