என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பள்ளி, கல்லூரிகள் திறப்பு தள்ளிப்போகிறதா?- அரசு தீவிர பரிசீலனை
Byமாலை மலர்10 Nov 2020 4:20 AM GMT (Updated: 10 Nov 2020 6:43 AM GMT)
பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பள்ளிகள் திறப்பை மட்டுமல்லாது, கல்லூரிகள் திறப்பையும் தள்ளிப்போட தீவிரமாக ஆலோசிப்பதாக கூறப்படுகிறது.
சென்னை:
பள்ளிகள், கல்லூரிகள் வருகிற 16-ந் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. பள்ளிகளைப் பொறுத்தவரையில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் செயல்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.
இதுதொடர்பாக பள்ளிகளில் பெற்றோரிடம் நேற்று கருத்துகளும் கேட்கப்பட்டன. பெரும்பாலான பெற்றோர் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று தங்களுடைய கருத்துகளையும், கோரிக்கையையும் முன்வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பள்ளிகள் திறப்பை மட்டுமல்லாது, கல்லூரிகள் திறப்பையும் தள்ளிப்போட தீவிரமாக ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை முதல்-அமைச்சரின் 3 மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பள்ளிகள், கல்லூரிகள் வருகிற 16-ந் தேதி முதல் செயல்பட அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு சமீபத்தில் தெரிவித்திருந்தது. பள்ளிகளைப் பொறுத்தவரையில் 9, 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் வகுப்புகள் செயல்படும் என்று கூறப்பட்டு இருந்தது. இதற்கு எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உள்பட அரசியல் கட்சி தலைவர்கள், கல்வியாளர்கள், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததோடு பள்ளிகள், கல்லூரிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று கோரிக்கையும் விடுத்தனர்.
இதுதொடர்பாக பள்ளிகளில் பெற்றோரிடம் நேற்று கருத்துகளும் கேட்கப்பட்டன. பெரும்பாலான பெற்றோர் பள்ளிகள் திறப்பை தள்ளிவைக்க வேண்டும் என்று தங்களுடைய கருத்துகளையும், கோரிக்கையையும் முன்வைத்தனர். இந்த கோரிக்கையை ஏற்று தமிழக அரசு பள்ளிகள் திறப்பை மட்டுமல்லாது, கல்லூரிகள் திறப்பையும் தள்ளிப்போட தீவிரமாக ஆலோசிப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு இன்று அல்லது நாளை முதல்-அமைச்சரின் 3 மாவட்ட சுற்றுப்பயணத்தின்போது அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X