என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பேரளம் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேர் கைது
Byமாலை மலர்2 Nov 2020 10:15 AM GMT (Updated: 2 Nov 2020 10:15 AM GMT)
பேரளம் அருகே சாராயம் விற்ற 2 பெண்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து, மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
நன்னிலம்:
பேரளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வி மற்றும் போலீசார் பேரளம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது பண்டாரவாடை அருகே வேகமாக வந்த ஒரு மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்தனர். பின்னர் அதில் வந்தவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் அம்பகரத்தூர் பகுதியை சேர்ந்த காளிதாஸ்(வயது 34) என்பதும், சாராயம் கடத்தி வந்து விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து காளிதாசை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்த 110 லிட்டர் சாராயத்தையும், மோட்டார்சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். இதே போல் திருமீயச்சூர் பகுதிகளில் சாராயம் விற்பதாக தகவல் வந்தது.
இதையடுத்து போலீசார் அங்கு சோதனை செய்தனர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த 2 பெண்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் அதே பகுதியை சேர்ந்த சரண்யா(30), கோவில்திருமாளம் பகுதியை சேர்ந்த சுமதி(54) ஆகியோர் என்பதும், சாராயம் விற்றதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் சரண்யா, சுமதி ஆகியோரை கைது செய்து, அவர்களிடம் இருந்த 220 லிட்டர் சாராயத்தையும் பறிமுதல் செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X