search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பெண்கள் கைது"

    • ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகளை எடுத்துக் கொண்டு கார் டிரைவர் தப்பி சென்று விட்டார்.
    • சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மேட்டூர்:

    மேட்டூர் அருகே நங்கவள்ளியில் பட்டுச்சேலை கடை நடத்தி வருபவர் செல்வகுமார். இந்த கடைக்கு பட்டு சேலை எடுப்பதற்காக ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 2 பெண்கள் சொகுசு காரில் வந்தனர். அவர்கள் செல்வகுமார் கடைக்குள் சென்று அங்கு பட்டு புடவைகள் ஒவ்வொன்றாக எடுத்து மாடல் பார்த்தனர்.

    அவற்றின் விலையை கேட்டறிந்தபடி ஆடம்பர வாழ்க்கை வாழ்வது போல் வசதியானவர்களாக பாசாங்கு காட்டிக் கொண்டு விலை உயர்ந்த பட்டு சேலை கொடுக்கும் படி அவர்கள் கேட்டனர். அதன்படி விலை உயர்ந்த பட்டுச் சேலைகள் ஒவ்வொன்றாக அவர்களிடம் காண்பிக்கப்பட்டது.

    அப்போது ஒரு பெண் மட்டும் வெளியே போவதும் உள்ளே வருவதுமாக இருந்ததை கண்ட கடை உரிமையாளர் சந்தேகம் அடைந்து கடையில் உள்ள சி.சி.டி.வி. கேமரா காட்சியை பார்த்தபோது அந்த பெண் பட்டுச்சேலையை உள்ளாடையில் மறைத்து வைத்து வெளியே நிறுத்தி வைத்த சொகுசு காரில் திருடி வைப்பது தெரியவந்தது.

    உடனடியாக கடை உரிமையாளர் சந்திரசேகர் அந்த 2 ஆந்திர மாநில பெண்களையும் பிடித்து விசாரித்து கொண்டு இருக்கும் போது வெளியே இருந்த சொகுசு காரில் டிரைவர் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள பட்டு சேலைகளை எடுத்துக் கொண்டு வேகமாக தப்பி சென்று விட்டார்.

    இதனால் சுதாரித்துக் கொண்ட கடை உரிமையாளர் நங்கவள்ளி போலீஸ் நிலையத்தில் பட்டு சேலை திருடிய 2 பெண்களையும் அழைத்து வந்து ஒப்படைத்து புகார் கொடுத்தார்.

    இதையடுத்து நங்கவள்ளி போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பெண்களிடம் விசாரித்தபோது ஆந்திரா மாநிலம் இங்கலூர் பேட்டையை சேர்ந்த ரந்தின (வயது 35), புவலட்சுமி (37) ஆகியோர் என்பது தெரியவந்தது. சொகுசு காரில் தப்பி சென்ற டிரைவர் குறித்தும் பரபரப்பு தகவல் தெரிவித்துள்ளனர்.

    பிடிபட்ட ரந்தின, புவலட்சுமி ஆகியோரை கைது செய்து இதுபோல் வேறு எங்கெல்லாம் குறி வைத்து பட்டுச் சேலைகளை திருடினார்கள்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார்.
    • போலீசார் 3 பெண்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர்.

    பரமத்திவேலூர்:

    சென்னை மேற்கு வேளச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் உமாகனகராஜ்( 58). இவர் நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூரில் நடைபெற்ற அவரது உறவினர் வீட்டு திருமணத்திற்கு கடந்த செப்டம்பர் மாதம் 8-ந் தேதி வெள்ளிக்கிழமை அன்று மாலை கரூரிலிருந்து சேலம் செல்லும் தனியார் பஸ்சில் ஏறி பரமத்தி வேலூருக்கு வந்து கொண்டிருந்தார்.

    அப்போது பஸ் பரமத்திவேலூர் நான்கு ரோடு பகுதியில் நின்ற போது திருமண மண்டபத்திற்கு செல்வதற்காக உமா கனகராஜ் கீழே இறங்கி உள்ளார். அப்போது பஸ்சில் அவருடன் நோட்டமிட்டு வந்த 3 பெண்கள் சில்லறை காசுகளை கீழே போட்டு உமாகனகராஜ் கவனத்தை திசை திருப்பி உள்ளனர்.

    அப்போது கைப்பேக்கில் மணிபர்சில் உமாகனகராஜ் வைத்திருந்த 25 பவுன் தங்க செயினை திருடி கொண்டனர். உமாகனகராஜ் திடீரென கை பேக்கில் இருந்த மணிபர்ஸை பார்த்தபோது 25 பவுன் தங்கச் செயின் இருந்த மணி பர்சை காணவில்லை. திருட்டு போய் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த உமா கனகராஜ் இது குறித்து பரமத்திவேலூர் போலீசில் புகார் செய்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து 25 பவுன் தங்கச் செயினை மர்மநபர்கள் திருடிச் சென்ற 4 ரோடு பகுதியில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான பதிவுகளை வைத்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். அப்போது நகை திருட்டுகளில் ஈடுபடும் பெண்களின் பழைய குற்றப்பதிவுகளை ஆராய்ந்தனர். பல்வேறு போலீஸ் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள அவர்களின் பெயர்களை ஆய்வு செய்தனர்.

    இந்நிலையில் நேற்று பரமத்திவேலூர் பஸ் நிலையத்திற்கு பின்புறம் உள்ள ஒரு கடைக்கு அருகில் 3 பெண்கள் சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்தனர். தகவல் அறிந்த போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்று மூன்று பெண்களையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் இவர்கள் 3 பேரும் சேர்ந்து உமா கனகராஜ் பேக்கில் இருந்த 25 பவுன் தங்க நகையை திருடியது தெரியவந்தது. அவர்களை கைது செய்து விசாரணை நடத்திய போது, திருப்பத்தூர் அவ்வை நகர் பகுதியைச் சேர்ந்த சக்தி என்பவருடைய மனைவிகள் அமுதா (36), நந்தினி( 30), மற்றும் தேவா என்பவரது மனைவி பூமிகா என்கிற பரிமளா (25) ஆகியோர் என்பது விசாரணையில் தெரிய வந்தது.

    இவர்கள் அனைவரும் தற்பொழுது கிருஷ்ணகிரி ராயக்கோட்டை ரோடு பெத்தனப்பள்ளி பகுதியில் குடியிருந்து வருவதும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து அவர்களிடம் இருந்து 15 பவுன் தங்க நகைகளை மீட்டனர். பின்னர் 3 பேரும் நாமக்கல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சேலம் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • பணம்-நகைகள் இன்று கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது.
    • சரண்யா, பிரியா ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் ஆவண மோசடி தடுப்பு பிரிவு போலீசார் 2 வழக்குகளில் 450 பவுன் தங்க நகைகள் மற்றும் ரூ.30 லட்சத்தும் மேல் ரொக்கப்பணம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். இந்த பணம்-நகைகள் இன்று கமிஷனர் அலுவலகத்தில் காட்சிக்காக வைக்கப்பட்டிருந்தது. இதனை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோர் பார்வையிட்டார்.

    ஏற்கனவே போடப்பட்ட பழைய வழக்கில் 250 பவுன் நகைகளும் தற்போது போடப்பட்டுள்ள வழக்கில் 200 பவுன் நகைகளும் மீட்கப்பட்டுள்ளன. தற்போது போடப்பட்டுள்ள வழக்கு சென்னையில் பருப்பு கம்பெனியில் கையாடல் செய்து மோசடியில் ஈடுபட்ட வழக்காகும். இந்த வழக்கில் சரண்யா, பிரியா ஆகிய 2 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். திவ்யா என்ற கர்ப்பிணி பெண் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர்.
    • அவர்களிடமிருந்து 18 மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் சப்-இன்ஸ் பெக்டர் லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் வடசிறுவள்ளூர், குளத்தூர் ஆகிய பகுதியில் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது வீட்டின் அருகில் மது பாட்டில் விற்பனை செய்து கொண்டிருந்த வடசிறு வள்ளூர் கிராமத்தை சேர்ந்த லட்சுமி (75), குளத்தூர் கிராமத்தை சேர்ந்த ஜோஸ்மின் (36) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 18 மதுபாட்டில் களையும் பறிமுதல் செய்தனர்.

    • பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா என்பவரையும் கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    கள்ளக்குறிச்சி:

    சங்கராபுரம் அருகே பகண்டை கூட்டுரோடு சப்- இன்ஸ்பெக்டர் ஜெயராமன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, இளையனார் குப்பத்தை சேர்ந்த வெங்கடேசன் மனைவி வினிதா (வயது 28) என்பவர், அந்த பகுதியில் மதுபாட்டில்கள் விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்து, அவரிடமிருந்து 7 மது பாட்டில்களை பறி முதல் செய்தனர். இதேபோன்று, லாலா பேட்டையில் மது பாட்டில் விற்றுக்கொண்டிருந்த சங்கர் மனைவி சுதா (42) என்பவரையும், கைது செய்து அவரிடமிருந்து 8 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

    • காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
    • 12 மூட்டைகளில் ரேசன் அரசி கடத்தப்படுவது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து திருப்பதி செல்லும் அரசு பஸ்சில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக சிவகாஞ்சி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. போலீசார் அந்த பஸ்சை காஞ்சிபுரம் பேட்டையில் நிறுத்தி திடீர் சோதனை செய்தனர். அப்போது அதில் 12 மூட்டைகளில் ரேசன் அரசி கடத்தப்படுவது தெரிந்தது. அதனை பறிமுதல் செய்தனர்.

    இந்த ரேசன் அரிசி கடத்தல் தொடர்பாக பஸ்சில் இருந்த ஆந்திர மாநிலம் புத்தூர் பகுதியைச் சேர்ந்த தீபா, கன்னியம்மாள் ஆகிய 2 பேரையும் கைது செய்து மேலும் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • மதுரை அருகே வியாபாரியை தாக்கிய பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
    • கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர்களுக்குள் முன்விரோதம் இருந்தது.

    மதுரை

    மதுரை வளர் நகர் அம்பலக்காரன் பெட்டியை சேர்ந்தவர் ராமன் (55). இவர் மாட்டுத்தாவணி பூ மார்கெட்டில் பூ வியாபாரம் செய்து வருகிறார்.அங்கு வண்டியூரைச்சேர்ந்த லெட்சுமி எனபவரும் வியாபாரம் செய்கிறார். கடையில் பூக்கள் திருடுபோவது தொடர்பாக இவர் களுக்குள் முன்விரோதம் இருந்தது.

    இந்த நிலையில் லட்சுமி யின் உறவினர்களான வண்டியூர் செம்மண் சாலையை சேர்ந்த கோபால கிருஷ்ணன் மனைவி மேனகா (37) , ராமசாமி மனைவி சாந்தி (50),சோனை மகள் ரேணுகா (39) ஆகிய 3 பேரும் ராமனை ஆபாச மாக பேசி தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த சம்பவம் குறித்து ராமன் மாட்டுத்தாவனி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து 3 பெண்களையும் கைது செய்தனர்.

    மதுரை தென்னோ லைக் காரத் தெருவை தெருவை சேர்ந்தவர் அன்புமணி. இவரது மனைவி பூர்ணிமா (38).இவர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். சம்பவத்தன்று தெற்கு வாசலில் உள்ள அரிசி கடைக்கு பூர்ணிமா சென்றிருந்தார். அப்போது அவரு க்கும் அங்கு வந்த ஆரப் பாளையம் ராஜேந்திரா மெயின்ரோடு கணேசன் மனைவி நிஷா காந்தி (45) என்பவருக்கும், இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த நிஷா காந்தி, பூர்ணிமாவை ஆபாசமாக பேசி தாக்கினார். இந்த சம்பவம் குறித்து பூர்ணிமா தெற்கு வாசல் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவுசெய்து நிஷா காந்தியை கைது செய்தனர்.

    • 14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார்.
    • ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர்.

    பல்லடம் :

    பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் பெருந்தொழுவு பகுதியை சேர்ந்த ராசு என்பவரது மகன் சந்திரன் (வயது 47). இவர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரை கரட்டுப்பாளையம் புதூரை சேர்ந்த சேகர் என்பவரது மனைவி கலாராணி என்கிற கலாவதி (45) அணுகினார். அவர் தனக்கு ரூ. 10 லட்ச ரூபாய் அவசர தேவை இருப்பதாகவும், அதற்கு ஈடாக தன்னிடம் உள்ள 14 பத்திரங்களை வைத்துக்கொண்டு கடன் தருமாறும் கேட்டுள்ளார். இதனைத் தொடர்ந்து சந்திரன் சம்பவத்தன்று காலை கலாராணி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது அங்கே மேலும் 4 நபர்கள் இருந்துள்ளனர். அவர்கள் சந்திரனை வீட்டிற்குள் அழைத்துச் சென்று மிரட்டி அவர் அணிந்திருந்த ஐந்தரைப்பவுன் தங்கச்செயின் மற்றும் சட்டை பையில் வைத்திருந்த ரூ.26 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்துள்ளனர். பின்னர் வங்கியில் இருந்த ரூ.40 ஆயிரம் பணத்தை கூகுள் பே மூலம் மாற்றி கொண்டனர். மேலும் அவரிடம் 6 பத்திர தாள்களில் கைரேகையை பதித்துக் கொண்ட அந்த கும்பல் அவரிடமிருந்து 3 வங்கி காசோலைகளையும் கையெழுத்திட்டு பெற்று கொண்டுள்ளனர். பின்னர் அங்கிருந்த சுமதி என்ற பெண்ணுடன் சந்திரனை அருகே அமர வைத்து போட்டோவும் எடுத்துள்ளனர்.

    அதன் பின்னர் அவரை விட்டுவிட்டு அங்கிருந்து சென்று விட்டனர். இதுகுறித்து சந்திரன் அவரது மனைவி மற்றும் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அதன்பின்னர் போலீஸ் நிலையம் வந்து புகார் தெரிவித்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.இதனைத் தொடர்ந்து கலாராணி மற்றும் ஐயப்பன் என்பவரது மனைவி சுமதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள மற்ற 3 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் பெருந்தொழுவு பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • அனிதா அணிந்திருந்த 14 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து கட்டைப்பையில் மறைத்து வைத்தார்.
    • நோட்டமிட்ட மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை திருடிச்சென்றனர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் பஸ் நிலையத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவையை சேர்ந்த சகாயராஜ் தனது மனைவி அனிதா(37) என்பவருடன் உறவினர் வீட்டு திருமணத்திற்கு வந்தார். திருமணத்தை முடித்துவிட்டு மீண்டும் கோவை செல்வதற்காக ஒட்டன்சத்திரம் பஸ்நிலையத்திற்கு வந்தனர்.

    அப்போது அனிதா அணிந்திருந்த 14 பவுன் நகைகளை ஒரு பையில் வைத்து கட்டைப்பையில் மறைத்து வைத்தார். இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் கண்ணிமைக்கும் நேரத்தில் நகையை திருடிச்சென்றனர். பஸ் ஏறியவுடன் நகையை பார்த்தபோது அது திருடுபோனதை கண்டு அதிர்ச்சி அடைந்த அனிதா ஒட்டன்சத்திரம் போலீசில் புகார் அளித்தார்.

    இன்ஸ்பெக்டர் ராஜசேகரன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் கவுசல்யா மற்றும் போலீசார் அப்பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமிராக்களின் பதிவை வைத்து ஆய்வு மேற்கொண்டனர். இதில் நகையை திருடியது வத்தலக்குண்டு பண்ணப்பட்டியை சேர்ந்த சத்யா(44), மதுரையை சேர்ந்த முத்துமாரி(35), தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியை சேர்ந்த ராணி(31) என தெரியவந்தது.

    இவர்கள் பஸ்நிலையம் மற்றும் கோவில் திருவிழாக்களில் தொடர்ந்து நகை திருட்டில் ஈடுபட்டு வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • வீட்டில் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் விற்பனை செய்த சம்பவம் தொடர்பாக 2 பெண்களை போலீசார் கைது செய்தனர்.
    • மொத்தம் 21 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி கம்மார் தெரு, அத்திக்குளம் மேடு ஆகிய பகுதிகளில் வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து கள்ளத்தனமாக விற்பனை செய்வதாக ஆரணி காவல் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாஸ்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சரஸ்வதி மற்றும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

    எனவே, இன்று காலை போலீசார் அந்தப் பகுதிகளில் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.

    ஆரணி கம்மார் தெருவில் மது விற்பனை செய்த காஞ்சனா(வயது32) என்ற பெண்ணை கைது செய்து அவரிடமிருந்து 13 மது பாட்டில்களையும், அத்திக்குளம் மேடு பகுதியில் மேற்கொண்ட சோதனையில் மது விற்பனை செய்த பத்மாவதி(வயது65) என்ற மூதாட்டியையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 9 மது பாட்டில்களையும் பறிமுதல் செய்தனர்.

    எனவே, மொத்தம் 21 மது பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இரண்டு பெண்களையும் காவல் நிலையம் கொண்டு வந்தனர். பின்னர், அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.

    • கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா்.
    • 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா்.

    காங்கயம்:

    ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சோ்ந்தவா் பிரவீன்குமாா் (வயது 25). காா் டிரைவரான இவா் காங்கயத்தை அடுத்த மடவிளாகம் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சிக்கு சென்றுள்ளாா். அப்போது கூட்டத்தில் பிரவீன்குமாரின் கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை ஒரு பெண் பறிக்க முயற்சி செய்துள்ளாா். உடனடியாக சுதாரித்துக்கொண்ட பிரவீன்குமாா், கூட்டத்தில் சந்தேகப்படும்படியாக நடமாடிய 3 பெண்கள் குறித்து காங்கயம் போலீசாரிடம் புகாா் தெரிவித்துள்ளாா்.

    இதையடுத்து மகளிா் காவல் நிலைய போலீசாா், 3 பெண்களையும் பிடித்து விசாரித்தனா். அதில் அந்த 3 பெண்களும் நாகா்கோவில், ஒழுவஞ்சேரி பகுதியைச் சோ்ந்த சுப்புதாய் (30), அட்சயா (28), மரியா (33) என்பதும், இவா்கள் 3 பேரும் கோவில் திருவிழா நிகழ்ச்சிகளுக்கு சென்று நகை பறிப்பு சம்பவத்தில் ஈடுபடுவதும் தெரிய வந்தது. இதையடுத்து 3 பேரையும் கைது செய்த போலீசார் அவா்களை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, மாவட்ட பெண்கள் சிறையில் அடைத்தனா். 

    • பிரதாப் ,குணசேகரன் உள்ளிட்டோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • ரூ.4 லட்சம் மதிப்பிலான 2407 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    அரூர்,

    தருமபுரி மாவட்டம் அரூர் காவல் உட்கோட்டத்திற்குட்பட்ட கோபிநாதம்பட்டி பகுதிகளில் கள்ள சந்தையில் மதுபாட்டில் விற்பனை செய்வதாக கிடைத்த தகவலின் பேரில் அரூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மஞ்சுளா, சிறப்பு காவல் ஆய்வாளர்கள் சக்திவேல் கமலநாதன் தலைமையிலான காவலர்கள் சுதாகர், மணிரத்தினம், சந்திரசேகர், பிரதாப் ,குணசேகரன் உள்ளிட்டோர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    ரோந்து பணியின் போது கள்ள சந்தையில் மது பாட்டில்கள் விற்பனை செய்த கோபிநாதம்பட்டிக ிராமத்தை சேர்ந்த ஆறுமுகம் மனைவி ருக்மணி (வயது 60), கெங்கன் மனைவி செல்வி (65), வேங்கன் மனைவி சாந்தி (70) ஆகிய மூன்று பேரையும் காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடம் இருந்த, ரூ.4 லட்சம் மதிப்பிலான 2407 மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர்.

    ×