என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பல்லடத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை
Byமாலை மலர்2 Nov 2020 7:34 AM GMT (Updated: 2 Nov 2020 7:34 AM GMT)
பல்லடத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி ராஜாமணி(வயது47). இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜா மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவம் பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ராஜாமணி தூங்கி கொண்டிருந்தார். பின்னர் எழுந்து கணவர் ராஜேந்திரனிடம், சுகாதார வளாகம் செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜேந்திரன் அங்கு சென்று பார்த்தார். அப்போது சுகாதார வளாகம் அருகில் வாயில் நுரை தள்ளியபடி ராஜாமணி கீழே கிடந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X