search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    பல்லடத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை

    பல்லடத்தில் விஷம் குடித்து பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பல்லடம்:

    பல்லடம் அருகே உள்ள கணபதி பாளையத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவருடைய மனைவி ராஜாமணி(வயது47). இவர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியாளராக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ராஜா மணிக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதற்காக மருத்துவம் பார்த்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ராஜாமணி தூங்கி கொண்டிருந்தார். பின்னர் எழுந்து கணவர் ராஜேந்திரனிடம், சுகாதார வளாகம் செல்வதாக கூறி சென்றவர் நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த ராஜேந்திரன் அங்கு சென்று பார்த்தார். அப்போது சுகாதார வளாகம் அருகில் வாயில் நுரை தள்ளியபடி ராஜாமணி கீழே கிடந்துள்ளார். இதையடுத்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை மீட்டு திருப்பூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ராஜாமணி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து பல்லடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    Next Story
    ×