search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    முக ஸ்டாலின்
    X
    முக ஸ்டாலின்

    ஒருநாள் மழைக்கே வெள்ளக்காடான சென்னை- முக ஸ்டாலின்

    பருவமழை தொடங்குகிறது என தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு அலட்சியம் காட்டியது என்று முக ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.
    சென்னை: 

    திமுக தலைவர் முக ஸ்டாலின் கூறியிருப்பதாவது,

    அரசின் அலட்சியத்தால் ஒருநாள் மழைக்கே சென்னை வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. மீண்டும் டிசம்பர் 15ந்தேதி வெள்ள அபாயத்தை சந்திக்கப் பொகிறோமோ என மக்கள் அஞ்சுகின்றனர். 

    பேரிடர் மீட்புப் பணியை அழைத்து சென்னை மாநகரைக் காப்பாற்ற போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும். பருவமழை தொடங்குகிறது என தெரிந்தும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் அரசு அலட்சியம் காட்டுகிறது.
    ரோட்டில் மழைநீர் தேங்கி நிற்கும் காட்சி.
    மழைநீர் வடிகால் அமைக்கும் ஊழலுக்கு துணைபோவதே முக்கிய பணி என அதிகாரிகள் செயல்படுகின்றனர். உள்ளாட்சி தேர்தல் நடந்திருந்தால் கவுன்சிலர்களாவது மக்கள் குறைகளைத் தீர்த்திருப்பார்கள் என்று கூறியுள்ளார்.
    Next Story
    ×