search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரசுத் தேர்வுகள் இயக்ககம்
    X
    அரசுத் தேர்வுகள் இயக்ககம்

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் வெளியீடு

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
    சென்னை:

    எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-1 மற்றும் பிளஸ்-2 பொதுத்தேர்வில் தோல்வி அடைந்தவர்கள், தேர்வை எழுத முடியாமல் போனவர்களுக்கு துணைத்தேர்வு நடத்தப்பட்டது. அந்த வகையில் தேர்வை எழுதியவர்களுக்கான தேர்வு முடிவு இன்றும், நாளையும் வெளியிடப்படும் என்று அரசு தேர்வுத்துறை தெரிவித்து இருந்தது.

    இந்நிலையில் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 வகுப்பில் தோல்வியடைந்தவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

    http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் துணைத்தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம்.

    இதுதவிர பிளஸ்-1 துணைத்தேர்வு முடிவு நாளை காலை 11 மணிக்கும் வெளியிடப்படுகிறது. மறுகூட்டல், விடைத்தாள் நகலுக்கு அடுத்த மாதம் (நவம்பர்) 3, 4-ந் தேதிகளில் பதிவு செய்யலாம்.

    Next Story
    ×