என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கந்தம்பாளையம் அருகே மின்சாரம் தாக்கி தொழிலாளி பலி
Byமாலை மலர்22 Oct 2020 9:01 AM GMT (Updated: 22 Oct 2020 9:01 AM GMT)
கந்தம்பாளையம் அருகே தென்னை மரத்தில் தேங்காய் பறிக்க ஏறியபோது மின்சாரம் தாக்கி தொழிலாளி பலியானார்.
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே பன்னீர்குத்திபாளையம் மேட்டுக்காடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 69). தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறிக்கும் தொழிலாளி. இவர் குப்பிரிகாபாளையத்தில் ரவிச்சந்திரன் என்பவரின் தோட்டத்தில் கடந்த 2 தினங்களாக கூலிக்கு தென்னை மரத்தில் தேங்காய் பறிக்கும் பணியில் ஈடுபட்டிருந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று மூர்த்தி தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்தபோது, அவருடைய கை அங்கு சென்ற மின்சார வயரில் எதிர்பாராதவிதமாக பட்டதாக தெரிகிறது. இதனால் அவர் மீது மின்சாரம் தாக்கி மரத்தில் இருந்து தவறி கீழே விழுந்து படுகாயம் அடைந்தார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு திருச்செங்கோடு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அங்கு டாக்டர்கள் பரிசோதனை செய்து பார்த்ததில் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து நல்லூர் போலீசார் மூர்த்தியின் உடலை கைப்பற்றி பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X