என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உசிலம்பட்டி அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு
Byமாலை மலர்21 Oct 2020 12:09 PM GMT (Updated: 21 Oct 2020 12:09 PM GMT)
உசிலம்பட்டி அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உசிலம்பட்டி:
உசிலம்பட்டி அருகே உள்ள வலையபட்டியை சேர்ந்தவர் தெய்வம். இவர் வலையபட்டி விலக்கில் டீக்கடை வைத்துள்ளார். நேற்று இவருடைய மனைவி அன்புமணி(வயது 28) கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரிடம் ஊறுகாய் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அன்புமணி ஊறுகாயை எடுத்து அவரிடம் கொடுத்தபோது திடீரென்று அந்த 2 மர்ம நபர்களும் அன்புமணி கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அன்புமணி உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X