search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    நகை பறிப்பு
    X
    நகை பறிப்பு

    உசிலம்பட்டி அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறிப்பு

    உசிலம்பட்டி அருகே பெண்ணிடம் 5 பவுன் நகை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    உசிலம்பட்டி:

    உசிலம்பட்டி அருகே உள்ள வலையபட்டியை சேர்ந்தவர் தெய்வம். இவர் வலையபட்டி விலக்கில் டீக்கடை வைத்துள்ளார். நேற்று இவருடைய மனைவி அன்புமணி(வயது 28) கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் அவரிடம் ஊறுகாய் கேட்டுள்ளனர். இதனைத் தொடர்ந்து அன்புமணி ஊறுகாயை எடுத்து அவரிடம் கொடுத்தபோது திடீரென்று அந்த 2 மர்ம நபர்களும் அன்புமணி கழுத்தில் இருந்த 5 பவுன் நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடிவிட்டனர். இதுகுறித்து அன்புமணி உசிலம்பட்டி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற 2 பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
    Next Story
    ×