என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அவினாசியில் மாணவன் தற்கொலை- போலீசார் விசாரணை
Byமாலை மலர்29 Sep 2020 6:20 AM GMT (Updated: 29 Sep 2020 6:20 AM GMT)
அவினாசியில் பள்ளி மாணவன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அவினாசி:
திருப்பூர் மாவட்டம் அவினாசி பி.எஸ்.சுந்தரம் வீதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரதிபா (39) என்ற மனைவியும், சஞ்சய் (15), நவீன் (13), வருண் (9) என்ற 3 மகன்களும் உள்ளனர். அவினாசி எம்.நாதம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சஞ்சய் 10-ம் வகுப்பும், நவீன்-8.ம் வகுப்பும், வருண் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
10-ம் வகுப்பு படிக்கும் சஞ்சய் ஆன்லைன் வகுப்பில் சரிவர படிக்காமல் செல்போனில் விளையாடுவது, வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாடுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளான். வருகிற 1-ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் சஞ்சய் ஆன்லைன் வகுப்பில் தனக்கு கொடுத்த வகுப்பு பாடம் மற்றும் வீட்டுப்பாடங்களை ஒழுங்காக படிக்காமல் இருந்து வந்துள்ளான்.
இதனால் பெற்றோர் விளையாடுவதை விட்டு, விட்டு ஒழுங்காக படிக்குமாறு சஞ்சயை பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சய் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்துள்ளான். இந்த நிலையில் நேற்றுகாலை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறி மாட்டுவதற்காக போடப்பட்டிருந்த இரும்பு சட்டத்தில் சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருப்பூர் மாவட்டம் அவினாசி பி.எஸ்.சுந்தரம் வீதியை சேர்ந்தவர் செந்தில்நாதன் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு வங்கியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு பிரதிபா (39) என்ற மனைவியும், சஞ்சய் (15), நவீன் (13), வருண் (9) என்ற 3 மகன்களும் உள்ளனர். அவினாசி எம்.நாதம்பாளையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் சஞ்சய் 10-ம் வகுப்பும், நவீன்-8.ம் வகுப்பும், வருண் 4-ம் வகுப்பும் படித்து வருகின்றனர்.
10-ம் வகுப்பு படிக்கும் சஞ்சய் ஆன்லைன் வகுப்பில் சரிவர படிக்காமல் செல்போனில் விளையாடுவது, வெளியில் சென்று நண்பர்களுடன் விளையாடுவதிலேயே அதிக கவனம் செலுத்தி வந்துள்ளான். வருகிற 1-ந்தேதி பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் சஞ்சய் ஆன்லைன் வகுப்பில் தனக்கு கொடுத்த வகுப்பு பாடம் மற்றும் வீட்டுப்பாடங்களை ஒழுங்காக படிக்காமல் இருந்து வந்துள்ளான்.
இதனால் பெற்றோர் விளையாடுவதை விட்டு, விட்டு ஒழுங்காக படிக்குமாறு சஞ்சயை பலமுறை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் சஞ்சய் மனம் உடைந்த நிலையில் இருந்து வந்துள்ளான். இந்த நிலையில் நேற்றுகாலை வீட்டில் யாரும் இல்லாத போது மின்விசிறி மாட்டுவதற்காக போடப்பட்டிருந்த இரும்பு சட்டத்தில் சஞ்சய் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டான்.
மேலும் இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X