என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
திருவள்ளூர் அருகே குளத்தில் வாலிபர் பிணம்- கொலை செய்யப்பட்டாரா?
திருவள்ளூர்:
திருவள்ளூர் பூங்கா நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 25). தனியார் தொழில்சாலையில் வேலை பார்த்து வந்தார். கடந்த 25-ந் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்ற விக்னேஷ் பின்னர் திரும்பி வரவில்லை. அவரை பல்வேறு இடங்களில் தேடியும், கண்டுபிடிக்க முடியவில்லை.
இந்த நிலையில் காக்களூர் தாமரைகுளம் அருகே விக்னேஷின் மோட்டார் சைக்கிள் மட்டும் கிடந்தது. குளத்திற்குள் விக்னேஷ் பிணமாக மிதந்தார். இதனை பார்த்த அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் திருவள்ளூர் தாலூகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து விக்னேஷின் உடலை மீட்டனர். பின்னர் பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
விக்னேஷ் குளத்தில் எப்படி விழுந்து இறந்தார் என்பது மர்மமாக உள்ளது. அவரை யாரேனும் அடித்து கொலை செய்து குளத்திற்குள் வீசினார்களா? அல்லது வேறு ஏதோனும் காரணமா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்