என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பொள்ளாச்சியில் ஆண் குழந்தை ரூ.80 ஆயிரத்துக்கு விற்பனை- தம்பதி உள்பட 3 பேர் கைது
பொள்ளாச்சி:
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அடுத்த அங்கலக்குறிச்சியை சேர்ந்தவர் சுதா. இவரது கணவர் முருகவேல். மாற்றுத்திறனாளி. இந்த தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு 4-வதாக சுதாவுக்கு ஆண் குழந்தை பிறந்தது. வேலையின்மை மற்றும் வறுமையால் குழந்தையை வளர்க்க முடியாத நிலை ஏற்பட்டது.
இதனையடுத்து குழந்தையை தத்துக்கொடுக்க முடிவு செய்தனர்.
இந்நிலையில், சுதாவை அவருக்கு பழக்கமான ஆழியாறு புளியங்கண்டியை சேர்ந்த பவுலினா (41) என்பவர் அணுகி உங்கள் குழந்தையை எனக்குத் தெரிந்த தம்பதிகளுக்கு கொடுக்குமாறு கேட்டார். இதையடுத்து கடந்த 6-ந் தேதி கோகிலா மற்றும் ராஜசேகர் தம்பதியை சுதா வீட்டிற்கு பவுலினா அழைத்து வந்தார். அங்கு ரூ.80 ஆயிரம் பணத்தை கொடுத்துவிட்டு குழந்தையை பெற்றுக் கொண்டனர்.
இந்த தகவல் சைல்டு லைன் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் ஆழியாறு போலீசில் புகார் கொடுத்தனர்.
அதன் அடிப்படையில் குழந்தையை விற்க இடைத்தரகராக செயல்பட்ட ஆழியாறு புளியங்கண்டியை சேர்ந்த பவுலினா மற்றும் குழந்தையை வாங்கிய கோகிலா, ராஜசேகர் தம்பதி ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்