என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஓணம் பண்டிகை: கோவை மாவட்டத்துக்கு 31ந்தேதி உள்ளூர் விடுமுறை - கலெக்டர் அறிவிப்பு
Byமாலை மலர்27 Aug 2020 2:25 AM GMT (Updated: 27 Aug 2020 7:36 AM GMT)
ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
கோவை:
“காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடு” என்பது பழமொழி. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல பாரம்பரியமான ஓணம் பண்டிகை கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் இந்தப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி ஓணம் திருநாள் விழா கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி கோவை மாவட்டத்தில் கருவூலம் உள்ளிட்ட பாதுகாப்பு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்கள் கொண்டு இயங்கும் என அறிவித்துள்ளார்.
விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 31-ந்தேதிக்கு பதிலாக செப்டம்பர் 12ம் தேதி வேலை நாளாக கருதப்படும் என ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.
மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் ஓணம் பண்டிகையை கோவை மாவட்ட மக்கள் தனிநபர் இடைவெளியுடன் பாதுகாப்போடு கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
“காணம் விற்றேனும் ஓணம் கொண்டாடு” என்பது பழமொழி. தமிழ்நாட்டில் பொங்கல் பண்டிகையை போல பாரம்பரியமான ஓணம் பண்டிகை கேரள மக்களால் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. சாதி, மத பேதமின்றி கொண்டாடப்படும் இந்தப்பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் வருகிற 31-ந்தேதி ஓணம் திருநாள் விழா கொண்டாடப்படுகிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு கோவை மாவட்டத்துக்கு ஆகஸ்ட் 31 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ராசாமணி உத்தரவிட்டுள்ளார்.
இதையொட்டி கோவை மாவட்டத்தில் கருவூலம் உள்ளிட்ட பாதுகாப்பு அலுவலகங்கள் குறைந்த பணியாளர்கள் கொண்டு இயங்கும் என அறிவித்துள்ளார்.
விடுமுறை அறிவிக்கப்பட்ட ஆகஸ்ட் 31-ந்தேதிக்கு பதிலாக செப்டம்பர் 12ம் தேதி வேலை நாளாக கருதப்படும் என ஆட்சியர் ராசாமணி தெரிவித்தார்.
மேலும் அவர் வெளியிட்ட அறிக்கையில் ஓணம் பண்டிகையை கோவை மாவட்ட மக்கள் தனிநபர் இடைவெளியுடன் பாதுகாப்போடு கொண்டாட வேண்டும் என தெரிவித்துள்ளார்.
இத்தகவலை மாவட்ட கலெக்டர் ராசாமணி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X