search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்
    X
    துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம்

    கட்சிக்கு மட்டுமே விஸ்வாசமாக இருங்கள்- ஓ பன்னீர்செல்வம் பேச்சு

    தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விஸ்வாசமாக இருக்க வேண்டும் என துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் பேசியுள்ளார்.
    தேனி:

    தேனி பெரியகுளத்தில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில்  துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியதாவது,

    தொண்டர்கள், நிர்வாகிகள் கட்சிக்கு மட்டுமே விஸ்வாசமாக இருக்க வேண்டும். தொண்டர்கள் எனக்கு விஸ்வாசமாக இருக்க வேண்டும் என நான் என்னியதே இல்லை. எண்ணம் தூய்மையாக இருக்க வேண்டும். எடுத்து வைக்கும் அடியும் தூய்மையாக இருக்க வேண்டும். 

    2021ல் அதிமுகவை ஆட்சிக் கட்டிலில் அமரவைப்பதையே இலக்காகக் கொண்டு களப்பணி ஆற்ற வேண்டும். நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக அமையும்.

    இவ்வாறு அவர் பேசினார். 
    Next Story
    ×