search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    வடிகால் வசதி ஏற்படுத்தி விட்டு சாலை அமைக்க வேண்டும் - பொதுமக்கள் கோரிக்கை

    வத்திராயிருப்பு அருகே வடிகால் வசதி ஏற்படுத்தி விட்டு சாலை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    வத்திராயிருப்பு:

    வத்திராயிருப்பு தாலுகாவிற்கு உட்பட்ட தம்பிபட்டி ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. இந்த ஊராட்சியின் 3-வது வார்டுக்குட்பட்ட அம்பேத்கர் காலனியில் தற்போது சிமெண்டு சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது. 

    கழிவுநீர் செல்லும் வடிகாலில் உள்ள மண் சாலையில் கொட்டப்பட்டு இருந்தது. இந்த மண்ணை தெருக்களில் பரப்பி, அதற்கு மேல் கற்களை கொட்டி சிமெண்டு சாலை போட முயன்றதாக தெரிகிறது. இதையறிந்த அப்பகுதி மக்கள் சாலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    கழிவுநீர் செல்லும் வகையில் வடிகால் வசதி ஏற்படுத்தி கொடுப்பதுடன், சேதமடைந்த சிமெண்டு சாலையை முற்றிலுமாக அகற்றி விட்டு புதிய சாலை அமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.
    Next Story
    ×