search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வடிகால் வசதி"

    • மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கிறது
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் புதிய சாலை பழைய பஸ் நிறுத்தம் பகுதியில் கழிவுநீர் கால்வாய் வசதி இல்லை என்பதால், கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை காரணமாக சாலையோரம் மழைநீர் குட்டைபோல் தேங்கி நிற்கும் அவலநிலை உள்ளது.

    கண்ணமங்கலம் பேரூராட்சி நிர்வாகம் இந்த இடத்தில் பயணிகளுக்கு நிழற்கூடம் அமைக்கவில்லை.மழை பெய்யும் போது பயணிகள் நனைந்தபடி நின்று பயணம் செய்து வருகின்றனர்.

    குட்டைபோல் தேங்கி நிற்கும் மழைநீர் காரணமாக இவ்வழியே வாகனங்கள் மூலம் செல்வோரும், நடந்து செல்வோரும் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்

    பேரூராட்சி நிர்வாகம் கண்ணமங்கலம் புதிய சாலை பகுதியில் மழைநீர் வெளியேறும் வகையில் போதிய வடிகால் வசதி செய்து தர வேண்டும் என பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×