search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொதுமக்கள் கோரிக்கை"

    • ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.
    • அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

    தென்திருப்பேரை:

    தூத்துக்குடி மாவட்டத்தில் பெய்த வரலாறு காணாத மழையால் ஆயிரக்கணக்கான கிராமங்கள் தனித்தீவுகளாக மாறின.

    ஸ்ரீவைகுண்டம், தென் திருப்பேரை, ஏரல் பகுதிகளில் சாலைகள் பெருமளவில் சேதம் அடைந்தன.

    தென்திருப்பேரை சுற்று வட்டார பகுதிகளில் பல ஏக்கரில் நெல் சாகுபடி செய்யப்பட்டிருந்தது, குட்டக்கரை, மேலக்கடம்பா, மற்றும் கடம்பாவின் கடைமடை ஊரான கல்லாம் பாறை போன்ற கிராமங்கள் மற்றும் கடயனோடை, கேம்பலாபாத் பகுதிகளுக்கு தொடர்ந்து 3 முதல் 4 நாட்களாக யாரும் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

    இப்பகுதியில் ஏராளமான கால்நடை கள் வெள்ளத்தால் அடித்து செல்லப்பட்டு இறந்தது. மேலும் சாலைகள் அடித்து செல்லப்பட்டது.

    ராஜபதி, குருகாட்டூர், சிவசுப்பிரமணியபுரம், குட்டி தோட்டம், மணத்தி, கார விளை, சோழியக்குறிச்சி, சேதுக்குவாய்தான், சொக்கப் பழக்கரை போன்ற கிராமங்கள் மிகப்பெரிய அளவில் சேதமடைந்துள்ளது.

    இக்கிராம சாலைகள் அனைத்தும் முழுவதும் சேதமடைந்து உள்ளது. இந்த சாலைகளை சீரமைக்க அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இதே போல ஸ்ரீவைகுண்டம் தாலுகாவுக்கு உட்பட்ட பொட்டல், ஆவரங்காடு, மாங்கொட்டாபுரம், வரதராஜபுரம், கட்டையம் புதூர், சிவராம மங்கலம், மங்க ளக்குறிச்சி, பெருங்குளம் ஏழு ஊர் கிராமம், ஏரல், ஆறுமுகமங்கலம், சம்படி, புள்ளா வெளி போன்ற ஊர்கள் மிக அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் அரசின் நிவாரணம் கிடைக்கும் என இப்பகுதி விவசாயிகள் எதிர்பார்த்து காத்திருகின்றனர்.

    • வாகன ஓட்டிகள் அவதி
    • போக்குவரத்துக்கு இடையூறு

    வேலூர்:

    வேலூர் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளான அண்ணாசாலை, கிருபானந்தவாரியார் சாலை,நேதாஜி மார்க்கெட், சத்துவாச்சாரி, காகிதப்பட்டறை, வேலூர் பழைய பஸ்நிலையம், கிரீன்சர்க்கிள், காட்பாடி உட்பட பல இடங்களில் சாலைகளில் மாடுகள் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றித்திரிகிறது.

    இந்த மாடுகள் பிடிக்கப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டாலும் தொடர்ந்து சாலைகளில் அவிழ்த்து விடப்பட்டு வருகிறது. இந்நிலையில் வேலூர் ஆற்காடு சாலையில் உள்ள சத்துவாச்சாரி மேம்பாலம் அருகே சாலையில் மாடுகள் கூட்டமாக போக்கு வரத்திற்கு இடையூறாக சுற்றி திரிகிறது.

    இதனால் அவ்வழியாக சென்ற பஸ், கார், பைக் போன்ற வாகன ஓட்டிகள் பாதசாரிகள் கடும் அவதிக்குள்ளாயினர்.

    காலை, மாலை, இரவு என எப்போதும் இந்த பகுதிகளில் மாடுகள் சுற்றுகின்றன.

    இவ்வாறு கூட்டமாக மாடுகள் சாலைகளில் திரிவதால் வாகனங்களில் செல்வோருக்கு பாதிப்பும், போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வாகனங்கள் வரிசையாக அணிவகுத்து நிற்கின்றன.

    சாலையில் நிற்கும் மாடுகள் திடீரென ஒன்றோடு ஒன்று மோதிக் கொள்வதாலும், சாலைகளில் ஓடுவதாலும் பைக்கில் செல்வோர் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்துகளில் சிக்க கூடிய நிலை ஏற்படுகிறது. மேலும் இந்த மாடுகள் சாலைகளை மறித்து அமர்ந்து கொள்கின்றன.

    இந்த பகுதி வழியாக பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்களும் திடீரென மாடுகளின் ஓட்டத்தால் பயந்து நிலை தடுமாறி கீழே விழுந்து எழுந்து செல்கின்றனர். இதிலும் சில மாடுகள் திடீரென சாலைகளில் நடந்து செல்வோர் மீது முட்ட வருவதால் பொதுமக்கள், முதியவர்கள் அச்சத்துடன் சாலையையும், மாடுகளையும் கடந்து செல்கின்றனர்.

    எனவே சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றியும் திரியும் மாடுகளை பிடித்து நிரந்த தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • பொம்மிடி பகுதியில் நெடுஞ்சாலையில் ஆக்கிரமிப்புகளால் போக்குவரத்து நெரிசலில் பொதுமக்கள் சிக்கித் தவிக்கின்றனர். எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி போக்குவரத்து நெரிசலை சீர்ப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • பொம்மிடியில் நெடுஞ்சாலை பகுதியில் கடைகள் வாகனங்கள் செல்லும் சாலை வரை ஆக்கிரமித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி:

    தருமபுரி மாவட்டம், பொம்மிடியில் பொ.மல்லாபுரம் பேரூராட்சி உள்ளது. இந்த பேரூராட்சியில் தர்மபுரி நெடுஞ்சாலை, சேலம் நெடுஞ்சாலை, ஓமலூர் சாலை, ரெயில் நிலையம், முக்கியகடைவீதி என 5 முனை இடங்களும் சந்திக்கும் பகுதி உள்ளது

    மிகவும் போக்குவரத்து நெரிசலில் இப்பகுதி சிக்கி அடிக்கடி விபத்துக்களை சந்தித்து வருகிறது

    பொம்மிடி அருகில் உள்ள மலை கிராமங்கள், வீராச்சியூர், பூமரத்–தூர், அக்கரவூர், வே.முத்தம்பட்டி, மணலூர், பையர் நத்தம், பில்பருத்தி என 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் தினமும் பொம்மிடிக்கு தங்கள் அன்றாட தேவைக்காக வந்து செல்கின்றனர்.

    பொம்மிடியில் 5-க்கும் மேற்பட்ட வங்கிகளும், முக்கிய ரெயில்கள் நின்று செல்லும் முக்கிய ரெயில் நிலையமாகவும் இருந்து வருகிறது

    இதனால் எப்போதும் மக்கள் கூட்டத்தாலும், வாகன நெரிசலும் அதிக அளவில் காணப்படுகிறது, இந்த நிலையில் நெடுஞ்சாலைக்கு சொந்தமான சாலை இடங்கள் ஆக்கிரமிப்பு கடைகள் அதிக அளவில் சாலையை ஆக்கிரமித்துள்ளனர்.

    நெடுஞ்சாலை உள்ள இடங்களை சில சமூக விரோதிகள் பிடித்து வைத்துக் கொண்டு வாடகை வசூலித்தும் வருகின்றனர். இந்த ஆக்கிரமிப்பு கடைகள் வாகனங்கள் செல்லும் சாலை வரை ஆக்கிர மித்துள்ளதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்தை சந்தித்து வருகின்றனர்

    இதனால் இப்பகுதியில் அடிக்கடி விபத்துகளும், உயிரிழப்புக்களும் ஏற்பட்டு வருகின்றனர் இது குறித்து சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கையில்

    கடந்த 10 ஆண்டுகளாக பேரூராட்சியில் அதிக அளவிலான ஆக்கிரமிப்புக் கள், சமூக விரோதிகளால் நடத்தப்பட்டு வருகின்றனர் இவர்கள் இடங்களை பிடித்து வைத்துக் கொண்டு போக்குவரத்துக்கு இடையூறாகவும், வாகனங்கள் செல்ல முடியாத அளவி லும் ஆக்கிரமிப்பு செய்து அரசு நிலங்களை வாடகைக்கு விட்டு பணம் சம்பாதித்து வருகின்றனர்

    இது குறித்து காவல்துறை, நெடுஞ்சாலைத்துறை, வருவாய்த்துறை, பேரூ ராட்சி நிர்வாகம் என அனைவரிடமும் பல முறை முறையிட்டு இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    எனவே நகர வளர்ச்சியை கருத்தில் கொண்டும் பொதுமக்களின் இடையூறுகளை தடுத்து நிறுத்த வேண்டும் என்பதற்காகவும் உடனடியாக ஆக்கிரமிப்புக்களை அகற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • நேற்று இரவு தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது.
    • தொடர்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, காட்டு எருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    தாளவாடி வனச்சரகத்திற்கு உட்பட்ட வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தைகள் அவ்வப்போது விவசாய தோட்டத்துக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய்களை வேட்டையாடுவது தொடர்கதையாகி வருகிறது.

    இந்நிலையில் தொட்ட காஜனூர், பீம்ராஜ்நகர், சூசைபுரம் பகுதியில் விவசாயிகள் அதிக அளவில் உள்ளனர். இவர்கள் அதிக அளவில் கால்நடைகளையும் வளர்த்து வருகிறார்கள்.

    கடந்த சில நாட்களாக வனப்பகுதியில் இருந்து வந்த சிறுத்தை இங்கு உள்ள கல்குவாரியில் பதுங்கி கொண்டு கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

    இந்நிலையில் நேற்று இரவு தொட்டகாஜனூர் பகுதியை சேர்ந்த குணசேகரன் என்பவரின் ஆட்டை சிறுத்தை கடித்து கொன்றது. இதுகுறித்து தாளவாடி வனத்துறைக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்துக்கு வந்த வனத்துறை கால் தடயங்களை ஆய்வு செய்து ஆட்டை கொன்றது சிறுத்தை என உறுதி செய்தனர்.

    தொடர்ந்து கால்நடைகளை சிறுத்தை வேட்டையாடி வருவதால் அப்பகுதி விவசாயிகள் பீதியடைந்துள்ளனர். கால்நடைகளை வேட்டையாடி வரும் சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் வறண்டு, புதர்கள் நிறைந்தும், குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் மண்டி கிடக்கிறது
    • செடி, கொடி, புதர்களை அகற்றி விட்டு, அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    உடுமலை:

    திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சிக்கு உட்பட்ட அன்னபூரணி நகரில் நகராட்சிக்கு சொந்தமான பூங்கா உள்ளது. இங்கு அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் வளர்க்கப்பட்டு, பராமரிக்கப்பட்டு வந்தன. தற்போது இந்த பூங்கா பராமரிப்பு இல்லாத நிலையில் வறண்டு, புதர்கள் நிறைந்தும், குப்பைகளும் பிளாஸ்டிக் கழிவுகளும் அதிக அளவில் மண்டி கிடக்கிறது. மேலும் இந்த பூங்காவிற்குள் அந்த பகுதியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொட்டியில் கொட்டி வைத்து அதை மக்க வைத்து இயற்கை உரம் தயாரிக்க திட்டமிடப்பட்டு சுமார் 3 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தொட்டிகள் கட்டப்பட்ட மேற்கூரையும் அமைக்கப்பட்டு இருந்தது. ஆனால் இந்த திட்டம் செயல்படுத்தப்படாமல் அந்த பகுதியில் புதர்கள் நிறைந்து மண்டிக்கிடக்கிறது. இதனால் பூங்காவில் விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதாகவும், அவைகள் அந்த பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் புகுந்து விடுவதாகவும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். ஆகவே சம்பந்தப்பட்ட நகராட்சி அதிகாரிகள் உடனடியாக இந்த பூங்காவிற்குள் வளர்ந்துள்ள செடி, கொடி, புதர்களை அகற்றி விட்டு, அழகிய வண்ண மலர்கள் கொண்ட செடிகள் அமைத்து, பராமரிக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து ஏராளமான கழிவுகளை தினந்தோறும் கொட்டி வருகின்றனர்.
    • ஏரிக்கரையை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை அமைத்தால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும்

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் நகரின் மையப்பகுதியில் காக்களூர் ஊராட்சியை இணைக்கும் இடத்தில் காக்களூர் ஏரி உள்ளது.

    இது 194 ஏக்கரில் 2682 மீட்டர் நீளம் வரை பரந்து விரிந்து காணப்படுகிறது. இது நான்கு மதகுகள், 2 கலங்கள் கொண்ட மிகப்பெரிய ஏரி ஆகும்.

    இந்த ஏரியை சுற்றி சுமார் 2 லட்சத்திற்கு அதிகமான குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். ஏரியில் 15 மில்லியன் கன அடி நீரை சேமித்து வைக்க முடியும். இதனால் கடந்த காலங்களில் காக்களூர் மற்றும் சுற்று வட்டார விவசாயிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தண்ணீர் அனுப்பப்பட்டும் வந்தது.

    இந்நிலையில் காக்களூர் ஏரிக்கரையை ஆக்கிரமித்து அடுக்குமாடி குடியிருப்பு, கட்டிடங்கள், கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. இதனால் ஏரியின் பரப்பளவு மெல்ல, மெல்ல சுருங்கி வருகிறது. மேலும் ஏரிக் கரையோரம், வீட்டு வசதி வாரிய குடியிருப்புகளில் வசித்து வருபவர்கள், ஆக்கிரமிப்பு செய்தவர்கள் சாலையோரத்தில் உணவு விடுதி நடத்துபவர்கள், திருவள்ளூர் நகராட்சி பகுதியில் உள்ள உணவு விடுதிகளில் இருந்து ஏராளமான கழிவுகளை தினந்தோறும் கொட்டி வருகின்றனர்.

    இதேபோல் வீடுகள், கடைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் நகராட்சி சார்பில் அமைக்கப்பட்ட மழைநீர் கால்வாய் மூலம் காக்களூர் ஏரிக்கு திறந்து விடுவதால் ஏரியில் கடும் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார கேடும் ஏற்படுகிறது. இதனால் ஏரி தண்ணீர் மாசு அடையும் நிலை உருவாகி உள்ளது. இதற்கிடையே விரைவில் வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில் வெள்ள பாதிப்பு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் தீவிரப்படுத்தி உள்ளது. மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்க்கீஸ் வெள்ள பாதிப்பு ஏற்படும் இடங்கள், பாதுகாப்பு நடவடிக்கைள் குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளார்.

    இந்நிலையில் காக்களூர் ஏரியின் கரைகள் பரிதாபமான நிலையில் உள்ளன. இந்த ஏரியில் அல்லி செடிகள், வேலி காத்தான் முள் செடிகள், பாளை செடிகள் அதிக அளவில் வளர்ந்து காணப்படுவதால் அதில் இருந்த மதகுகள் கலங்கள் இருந்த இடமே தெரியாத நிலை உள்ளது. மேலும் கரைகளும் சேதம் அடைந்து மோசமான நிலையில் காணப்படுகிறது. மழைதீவிரம் அடைந்தால் நீர்வரத்து அதிகமாகி காக்களூர் ஏரியின் கரைகள் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே வெள்ள அபாயம் ஏற்படும் முன்பு கரைகளை பலப்படுத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர் நகராட்சி மற்றும் காக்களூர் ஊராட்சி ஆகிய பகுதிகளில் விவசாய நிலங்கள் பெரும்பாலும் வீட்டுமனைகளாக மாற்றப்பட்டு வருகிறது. இதனால் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை 30 முதல் 40 அடியாக இருந்த நிலத்தடி நீர் மட்டம் தற்போது 100 அடியாக உயர்ந்துள்ளது.

    எனவே மாவட்ட தலை நகரில் உள்ள காக்களூர் ஏரியை தூர் வாரி, அடர்ந்து வளர்ந்துள்ள அல்லி செடி, பாளை செடி, வேலிக்காத்தான் முள்செடி ஆகியவற்றை அகற்றி பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்கும். மேலும் ஏரிக்கரையை சீரமைத்து சுற்றிலும் நடைபாதை அமைத்தால் பொதுமக்களுக்கு பயன் உள்ளதாக இருக்கும் என்றனர்.

    • 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.
    • பெரும்பாலானவை வயர்கள் அறுந்தும், சேதம் அடைந்தும் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.

    பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், தடபெரும்பாக்கம் கிருஷ்ணாபுரம், திருவாயர்பாடி, உள்ளிட்ட முக்கிய இடங்களில் 35 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தன.

    இதனால் குற்றச்சம்பவங்களில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிப்பதற்கு பெரிதும் உதவியாக இருந்தது. மேலும் குற்ற செயல்களும் குறைந்து இருந்தன. இந்நிலையில் இந்த கண்காணிப்பு காமிராக்களில் பெரும்பாலானவை வயர்கள் அறுந்தும், சேதம் அடைந்தும் செயல்பாட்டில் இல்லாமல் உள்ளது.

    எனவே கண்காணிப்பு காமிராக்களை சீரமைத்து குற்றச்செயல்களை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
    • அதிவிரைவு வண்டிகள் நின்று செல்லும் நிலையமாக விருத்தாச்சலம் சந்திப்பு உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம் ெரயில்வே நிலையம் மாவட்டத்தில் மிக முக்கிய மான ெரயில்வே சந்திப்பு நிலையம் ஆகும். அருகில் இருக்கும் நெய்வேலி, பெண்ணாடம், வேப்பூர், திட்டக்குடி, தொழுதூர் உள்ளிட்ட இடங்களிலிருந்து தினந்தோறும் நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகள் சென்னை, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமேஸ்வரம், தென்காசி உள்ளிட்ட இடங்களுக்கு செல்ல விருத்தாசலம் ரெயில் நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.

    மேலும் விழுப்புரம் -திருச்சி இடையே கார்டு லைனில் ஓடும் அனைத்து ெரயில்களும் நின்று செல்லும் முக்கியமான நிலையமாக விருத்தாசலம் உள்ளது.சென்னை -மதுரை இடையே ஓடும் தேஜஸ் விரைவு ெரயிலை தவிர அனைத்து விரைவு மற்றும் அதிவிரைவு வண்டிகள் நின்று செல்லும் நிலையமாக விருத்தாச்சலம் சந்திப்பு உள்ளது. இந்நிலையில் நேற்று பிரதமர் நரேந்திர மோடி திருநெல்வேலி- சென்னை இடையே புதிய வந்தே பாரத் ெரயிலை தொடங்கி வைத்தார். இந்த ெரயிலின் கால அட்டவணையில் விருத்தாசலம் ெரயில் நிலையத்தில் வண்டி நிற்காது என்ற அறிவிப்பு விருத்தாசலம் பயணிகளி டையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் கடலூர் மற்றும் அருகில் இருக்கும் அரியலூர் மாவட்டத்தில் உள்ள எந்த நிலையத்திலும் நிற்காது என அறிவிக்கப்பட்டு உள்ளது.

    விழுப்புரம் -திருச்சி இடையே உள்ள சுமார் 180 கிலோமீட்டர் தொலைவிற்கு எந்த நிலையத்திலும் நிற்காது என்ற அறிவிப்பும் பொது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. எனவே விருத்தாசலம் ெரயில் நிலையத்தில் வந்தே பாரத் ரெயில் நின்று செல்ல வேண்டும் என ரயில்வே அமைச்சர், இந்திய ெரயி ல்வே, தென்னக ெரயில்வே மற்றும் ெரயில்வே கோட்ட அதிகாரிகளுக்கு விருத்தாச்ச லம் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தை என தெரிய வந்தது.
    • வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, புலி, சிறுத்தை, கரடி, காட்டெருமை, மான்கள் உள்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இதில் யானைகள் வனப்பகுதியை விட்டு வெளியேறி தோட்டத்துக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி வருகிறது. இதைப்போல் சிறுத்தை, புலிகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து கால்நடைகளை தொடர்ந்து வேட்டையாடி வருகிறது.

    இந்நிலையில் ஏர்மாளம் வனச்சரகத்திற்குட்பட்ட காட்டடி அருகே உள்ள வேடர்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா. இவர் 15 ஆடுகள், 5 மாடுகளை வளர்த்து வருகிறார். நேற்று இரவு வழக்கம் போல் ஆடுகளை பட்டியில் கட்டி வைத்துவிட்டு தூங்க சென்று விட்டார்.

    இன்று காலை எழுந்து பார்த்தபோது பட்டியில் இருந்த 11 ஆடுகள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். ஆடுகளின் கழுத்துகளில் மர்ம விலங்கு ஆழமாக கடித்த தடயங்கள் இருந்தன.

    இதுகுறித்து ஏர்மாளம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை மேற்கொண்டதில் ஆடுகளை கடித்துக் கொன்றது சிறுத்தை என தெரிய வந்தது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த கால்நடை வளர்ப்பவர்கள், பொதுமக்கள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக வனத்துறையினர் ஊருக்குள் புகுந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் விவசாயி ராஜா பலியான ஆடுகளுக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

    • குவாரிகளுக்கு பயன்படுத்த கூடிய வெடி மருந்துகளை தேக்கி வைக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது.
    • ஆக்கிரமிக்கப்பட்ட நீரோடையை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி சீரமைத்தனர்.

    தொப்பூர்,

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள நாகர்கூடல் ஊராட்சி பகுதியில் இருந்து பங்குநத்தம் செல்லும் வழியாக வனப்பகுதி அமைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பட்டா நிலத்தில் கல் குவாரிகளுக்கு பயன்படுத்த கூடிய வெடி மருந்துகளை தேக்கி வைக்கும் குடோன் செயல்பட்டு வருகிறது.

    அந்த குடோனுக்காக சாலை பகுதியில் இருந்த நீரோடைகளை மண் கொட்டி மூடி விட்டு வனப்பகுதி வழியாக சட்ட விரோதமாக மண் சாலை அமைத்து அதிக அளவில் அப்பகுதிக்கு வெடி மருந்துகள் கொண்டு வருவதாக பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

    மேலும் ஊராட்சியில் எந்த அனுமதியும் பெறாமல் இந்த குடோன் செயல்படுவதாகவும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர். மேலும் இரவு நேரங்களில் அதிவேகமாக வாகனங்கள் பயணித்து வருவதால் அப்பகுதியில் விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

    இதனையடுத்து அப்பகுதி பொதுமக்கள் மற்றும் ஊராட்சி நிர்வாகம் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்ட நீரோடையை ஜே.சி.பி இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி சீரமைத்தனர். அதனை தொடர்ந்து உரிய அனுமதி பெற்ற பின்னரே இப்பகுதியில் வெடி மருந்து குடோன் இயங்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

    அனுமதி இல்லாமல் செயல்படும் பட்சத்தில் ஏதேனும் அசம்பாவிதங்களோ அல்லது வெடி விபத்தோ ஏற்பட்டால் மிகப்பெரிய சேதம் மற்றும் உயிரிழப்புகள் ஏற்படும் எனவும், இதனால் பாதுகாப்பு கருதி மாவட்ட நிர்வாகம் ஆய்வு மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர்.
    • இதேபோல் பேருந்து நிலைய மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விரிசல் ஏற்பட்டுள்ளது.

    திருவள்ளூர்:

    திருவள்ளூர் பஸ் நிலையத்தில் இருந்து சென்னை, புதுச்சேரி, திருப்பதி, திருத்தணி, ஆவடி, ஊத்துக்கோட்டை, செங்குன்றம், பெரியபாளையம், காஞ்சிபுரம், வேலூர், பெங்களூர் உட்பட பல்வேறு பகுதிகளுக்கு விழுப்புரம் கோட்ட அரசு பஸ்கள் மற்றும் மாநகர பஸ்கள் மற்றும் தனியார் பஸ்கள் இயக்கப்படுகிறது.

    இதில் பயணிப்பதற்காக பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலர்கள், பணியாளர்கள், பொது மக்கள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் திருவள்ளூர் பஸ் நிலையம் வந்து செல்கின்றனர்.

    இந்த பழைய பேருந்து நிலையம் சுமார் 20 வருடத்திற்கும் முன் கட்டப்பட்ட பேருந்து நிலையத்தை பயணிகள் பயன்பாட்டுக்காக செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர், சின்னாலம்பாடி பகுதி சேர்ந்த சரசு இவரது மகள் குமாரி மற்றும் 5 மாத குழந்தை புவனேஷ். மற்றும் அவரது உறவுக்கார பெண்ணான சுபத்ரா மற்றும் 9 மாத கைக்குழந்தை தர்ஷன் ஆகியோரை அழைத்துக் கொண்டு பொன்னேரி பகுதியில் உடல்நிலை சரியில்லாத காரணத்திற்க்காக தாயத்து கட்டிக்கொண்டு மீண்டும் திருவள்ளூர் பேருந்தும் நிலையத்திற்கு வந்தார்.

    அப்போது அங்கு இருக்கும் சிமெண்ட் இருக்கையில் இருந்து குழந்தைக்கு பால் கொடுப்பதற்காக அமர்ந்த போது பேருந்து நிலையத்தின் மேற்கூரை இடிந்து சரசு, குமாரி. சுபத்திரா ஆகியோர் மீது விழுந்துள்ளது இதில் சரசு கையில் லேசான காயம் ஏற்பட்டது. குழந்தைகள் புவனேஷ் மற்றும் தக்சன் ஆகியோர் கண்களில் சிமெண்ட் கற்கள் சிதறி விழுந்தன. இதனால் கண் எரிச்சலால் குழந்தைகள் அலறி துடித்தனர்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவள்ளூர் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு நகராட்சி அதிகாரிகளுக்கும் தகவல் அளித்துள்ளனர்.

    மேலும் இதேபோல் பேருந்து நிலைய மேற்கூரை ஆங்காங்கே பெயர்ந்து விரிசல் ஏற்பட்டு ள்ளது. இந்த விரிசல் ஏற்பட்ட பகுதியில் இருந்து எந்த நேரத்தி லும் மேற்கூரை பெயர்ந்து விழலாம் என்ற அச்சத்தில் பயணிகள் உறைந்துள்ளனர். எனவே உடனடியாக திருவள்ளூர் நகராட்சியினர் பயணிகளுக்கு அசம்பாவிதம் ஏற்படும் முன் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • சீமை கருவேல மரங்களை அகற்றினர்
    • கரைகளை பலப்படுத்த வேண்டும் என உத்தரவிட்டார்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியத்துக்கு உட்பட்ட, நெல்வாய் ஊராட்சியில் உள்ள ஏரி சுமார் 50 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

    இந்த ஏரியில் சீமைக் கருவேலமரங்கள் அதிக அளவில் வளர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. மழைக்காலங்களில் ஏரியில் தேங்கும் தண்ணீரை ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்கள் உறிஞ்சு விடுகிறது.

    இதனால் ஏரி நிரம்பிய சில மாதங்களிலேயே தண்ணீர் வற்றிபோகிறது. எனவே சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த நிலையில் வேலூர் எக்ஸோனாரா இன்ட ர்னேஷனல் தொண்டு நிறுவனம் தானாக முன்வந்து, நெல்வாய் ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்றி ஏரியை தூர்வார அனுமதி கேட்டு கடிதம் வழங்கினர். அதன்படி தொண்டு நிறுவனத்துக்கு ஏரியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற அனுமதி வழங்கினார்.

    அதன்படி ஏரியில் உள்ள சீமை கருவள மரங்கள் பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றும் பணி தொடங்கி நடந்து வருகிறது. இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் இன்று காலை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    கருவேல மரங்கள் முழுவதாக அகற்றி, ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின்போது கணியம்பாடி ஒன்றியகுழு தலைவர் திவ்யாக மல்பிரசாத், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி, தாசில்தார் செந்தில், உடன் இருந்தனர்.

    ×