search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Public demand to"

    • புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டு எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள சாலை குண்டும், குழியுமாகவும் உள்ளது.
    • நீண்ட ஆண்டுகளாக கோரிக்கையான சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    பு.புளியம்பட்டி:

    புஞ்சைபுளியம்பட்டி நகராட்சி 1-வது வார்டு எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து வெங்கநாயக்கன்பாளையம் பெரியார் காலனி வரை உள்ள சாலை குண்டும், குழியுமாகவும், பொதுமக்கள் நடக்க முடியாத அளவிலும், பள்ளி வாகனம், இருசக்கர வாகனங்கள் செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது.

    மழை நீர் தேங்கி நிற்பதால் இப்பகுதியில் கொசு தொல்லைகளும் மற்றும் நோய் தொற்றும் ஏற்படுகிறது. இப்பகுதியில் உள்ள கழிவு நீர் வடிகால் பகுதி சில இடங்களில் சேதம் அடைந்துள்ளது.

    எஸ்.ஆர்.டி. நகர் பின்புறம் உள்ள 1-வது முதல் 9-வது வீதிகள் வரை புஞ்சைபுளியம்பட்டி நகராட்சியை சேர்ந்த பொதுமக்களும், வெங்கநாயக்கன்பாளையம் பெரியார் காலனி, முத்து நகர் பகுதி பொதுமக்களும் இச்சாலை பயன்படுத்தி வருகிறார்கள்.

    இச்சாலை நல்லூர் ஊராட்சி மற்றும் மாதம்பாளையம் ஊராட்சி சேர்ந்த சாலை என்பதால் ஊராட்சி தலைவர் மற்றும் பவானிசாகர் ஒன்றிய சேர்மன், பவானிசாகர் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.

    இதுவரை சாலையை சீரமைக்க எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே நீண்ட ஆண்டுகளாக கோரிக்கையன சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    • ஈங்கூர் ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய மரம் ஒன்று உள்ளது.
    • மரத்தின் அடிப்பகுதி தாங்க முடியாமல் எந்த நேரமும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது.

    சென்னிமலை:

    சென்னிமலையில் அதிக போக்குவரத்து உள்ள ரோடு ஈங்கூர் ரோடு ஆகும்.

    இந்த ரோட்டில் பத்திரப்பதிவு அலுவலகம் முன்பு பெரிய மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் அடிப்பகுதியில் மிகப் பெரிய அளவில் துவாரம் ஏற்பட்டதால் மரத்தின் அடிப்பகுதி வலுவிழந்தது.

    இதனால் மரத்தின் ஒரு கிளை ஒடிந்து ரோட்டில் விழுந்தது. நல்ல வேளையாக அப்போது யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.

    தற்போது அந்த மரத்தின் கிளைகள் அதிக அளவில் பரவி உள்ளதால் மரத்தின் அடிப்பகுதி தாங்க முடியாமல் எந்த நேரமும் ஒடிந்து விழும் நிலையில் உள்ளது.

    இது குறித்து அந்த மரத்தை அகற்ற பொது மக்கள் நெடுஞ்சாலை துறையினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.  

    ×