search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் உடலை ஆற்றை கடந்து அடக்கம் செய்த உறவினர்கள்:  ஆற்றில் தரை பாலம் அமைத்து  தர பொதுமக்கள் கோரிக்கை
    X

    ஆற்றை கடந்து பெண் உடலை சுமந்து சென்று அடக்கம் செய்ய சென்ற உறவினர்கள்.

    பெண் உடலை ஆற்றை கடந்து அடக்கம் செய்த உறவினர்கள்: ஆற்றில் தரை பாலம் அமைத்து தர பொதுமக்கள் கோரிக்கை

    • இறந்தவர்கள் உடலை அருகில் உள்ள பீணியாற்றை கடந்து எடுத்துச் சென்று அடக்கம் செய்வர்.
    • உடனடியாக அரசு ஆற்றில் தரை பாலம் அமைத்து கொடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கொக்கராப்பட்டி வருவாய் கிராமத்திற்கு உட்பட்ட குமாரபாளையம் உள்ளது. இந்த பகுதியில் பட்டியியல் இன மக்கள் 80 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் இறந்தவர்கள் உடலை அருகில் உள்ள பீணியாற்றை கடந்து எடுத்துச் சென்று அடக்கம் செய்வர்.

    இந்த நிலையில் பருவமழை கடந்த வாரம் முழுவதும் வலுவாத பெய்ததால் ஆற்றில் வெள்ள பெருக்கு ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில் இந்த பகுதியை சேர்ந்த கலைசெல்வி என்பவர் மரணமடைந்தார். இவரது உடலை உறவினர்கள் சுமந்து கொண்டு மாற்று பாதை இல்லாததால் ஆற்றில் இறங்கி ஆபத்தான முறையில் சுமந்து சென்றனர். இந்த சம்பவம் சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகின்றது.

    பட்டியல் இன மக்கள் என்பதால் மாற்று பாதை இருந்தும் பயன்படுத்த முடியாத நிலைக்கு இந்த மக்கள் தள்ளப்பட்டனரா ? என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் உரிய விசாரணை மேற்கொள்ள சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாற்று பாதை இல்லாத நிலை இருந்தால் உடனடியாக அரசு ஆற்றில் தரை பாலம் அமைத்து கொடுக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

    Next Story
    ×