search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muddy"

    • அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர்.
    • கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஊராட்சி ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் கிராமத்தில் இருந்து ஏரிக்கரை வழியாக வனத்தாம்பாளையம் செல்லும் தார்சாலை பெரியபாபுசமுத்திரத்தில் மண் சாலை போல மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலை சேறும் சகதியுமாக மக்கள் பயன்படுத்த முடியாத அளவு மிக மோசமாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் மிகவும் பாதிப்பு அடைந்து வருகின்றனர். 

    இச்சாலை வழியாக புதுச்சேரி மற்றும் விழுப்புரம் பகுதிகளுக்கு சென்று வர பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் குறுக்கு வழியாக பயன்படுத்தி வருகின்றனர். எனவே பெரியபாபு சமுத்திரத்தில் இருந்து வனத்தாம்பாளையம் செல்லும் ஏரிக்கரை சாலையை பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

    • பஸ்கள் நிறுத்தப்படும் அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மிக மோசமாக உள்ளது.
    • டிரைவர்கள் பஸ்களை பணிமனையில் இயக்குவது மிக சிரமமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி உட்பட்ட தி.இளமங்கலத்தில் கடந்த சுமார் 29 ஆண்டுகளுக்கு மேலாக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் திட்டக்குடி கிளை பணிமனை உள்ளது. இங்கு பஸ்கள் நிறுத்தப்படும் அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மிக மோசமாக உள்ளது.

    இதனால் டிரைவர்கள் பஸ்களை பணிமனையில் இயக்குவது மிக சிரமமாக உள்ளது. சில சமயம் பஸ்கள் பணிமனையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் டிவைர்கள் பஸ்களை இயக்க சிரமப்படுகின்றனர்.இது குறித்து பல ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு போக்குவரத்து பணிமனையை சீர் செய்து சமநிலைப்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் அவல நிலை நீடிக்கிறது.

    பஸ்களை இயக்கும் சமயத்தில் பள்ளத்தில் பஸ் சிக்கிக் கொண்டு பழுது ஏற்பட்டால் டிவைர்கள் பொறுப்பு என அவர்களுக்கு மெமோ கொடுப்பதாக புகார் எழுந்து உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் அரசு பஸ்களை பராமரிக்கும் பணிமனை பொறுப்புடன் அப்பகுதியில் சிமெண்ட் தளம் அமைத்து பஸ்களை நிறுத்த வேண்டும். மேலும் பணிமனையில் பணி புரியும் ஊழியர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கும் ஓய்வறை உயரமான தளம் அமைத்து தர வேண்டும்.

    காரணம் தற்போது தரை மட்டத்துக்கு ஓய்வறை உள்ளதால் பின்புறம் உள்ள் விவசாய நிலங்களில் இருந்து பாம்புகள் உள்ளே நுழைவது அன்றாட நிகழ்வுகளாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்து பணிமனையை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

    பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மட்டி படத்தின் முன்னோட்டம்.
    பிரமாண்ட அளவில் ஆறு மொழிப் படமாக உருவாகியிருக்கும் படம் 'மட்டி' (Muddy). இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார். பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத்  தயாரித்துள்ளது. குடும்பம், பகை, பழிவாங்கல், ஆக்ஷன், திகில் என்று பல  வண்ணங்களில் இப்படக்கதை சுற்றிச் சுழலும்.

    'கே ஜி.எப்' படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ராட்சசன்' படப்புகழ் சான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். 'புலி முருகன்' புகழ் ஆர்.பி.பாலா  இப்படத்திற்குத் தமிழில் வசனம் எழுதி இருக்கிறார்.

    மட்டி படத்தின் போஸ்டர்

    யுவன் கிருஷ்ணா, ரிதன், அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பல படங்களில் அறிமுகமான முகங்களும் இப்படத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
    ×