என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Govt Bus Workshop"

    • பஸ்கள் நிறுத்தப்படும் அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மிக மோசமாக உள்ளது.
    • டிரைவர்கள் பஸ்களை பணிமனையில் இயக்குவது மிக சிரமமாக உள்ளது.

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி நகராட்சி உட்பட்ட தி.இளமங்கலத்தில் கடந்த சுமார் 29 ஆண்டுகளுக்கு மேலாக அரசு போக்குவரத்து கழக விழுப்புரம் கோட்டம் திட்டக்குடி கிளை பணிமனை உள்ளது. இங்கு பஸ்கள் நிறுத்தப்படும் அனைத்து பகுதிகளும் மழைக் காலங்களில் சேறும் சகதியுமாக மிக மோசமாக உள்ளது.

    இதனால் டிரைவர்கள் பஸ்களை பணிமனையில் இயக்குவது மிக சிரமமாக உள்ளது. சில சமயம் பஸ்கள் பணிமனையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தில் சிக்கிக் கொள்வதால் டிவைர்கள் பஸ்களை இயக்க சிரமப்படுகின்றனர்.இது குறித்து பல ஆண்டுகளாக போக்குவரத்து தொழிலாளர்கள் தமிழக அரசுக்கு போக்குவரத்து பணிமனையை சீர் செய்து சமநிலைப்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தும் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக தொடரும் அவல நிலை நீடிக்கிறது.

    பஸ்களை இயக்கும் சமயத்தில் பள்ளத்தில் பஸ் சிக்கிக் கொண்டு பழுது ஏற்பட்டால் டிவைர்கள் பொறுப்பு என அவர்களுக்கு மெமோ கொடுப்பதாக புகார் எழுந்து உள்ளது.இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில் அரசு பஸ்களை பராமரிக்கும் பணிமனை பொறுப்புடன் அப்பகுதியில் சிமெண்ட் தளம் அமைத்து பஸ்களை நிறுத்த வேண்டும். மேலும் பணிமனையில் பணி புரியும் ஊழியர்கள், டிரைவர்கள், கண்டக்டர்கள் தங்கும் ஓய்வறை உயரமான தளம் அமைத்து தர வேண்டும்.

    காரணம் தற்போது தரை மட்டத்துக்கு ஓய்வறை உள்ளதால் பின்புறம் உள்ள் விவசாய நிலங்களில் இருந்து பாம்புகள் உள்ளே நுழைவது அன்றாட நிகழ்வுகளாக உள்ளது. இதனை கருத்தில் கொண்டு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் போக்குவரத்து பணிமனையை போர்க்கால அடிப்படையில் சீர் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர். 

    • பிரதிநிதிகள் கண்களில் கருப்பு துணி கட்டி பங்கேற்பு.
    • 13 தொழிற்சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

    தாம்பரம்:

    தமிழக அரசு போக்குவரத்து கழகங்களில் 11 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான 14-வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டுக்கு மேலாகியும் போடப்படவில்லை. வேலைநிறுத்தம் உள்ளிட்ட போராட்டங்களை நடத்த திட்டமிட்டுள்ளன.

    இந்தநிலையில் போக்குவரத்து ஊழியர்களின் புதிய ஊதிய ஒப்பந்தம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்த 15-வது ஊதிய ஒப்பந்த இரண்டாம்கட்ட பேச்சுவார்த்தை இன்று குரோம்பேட்டையில் உள்ள தொழிற்சங்க பயிற்சி மையத்தில் அமைச்சர் சிவசங்கர் தலைமையில் நடைபெற்றது.

    இந்த பேச்சுவார்த்தையில் 13 தொழிற்சங்கத்தை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் நடராஜன், சவுந்தரராஜன் மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

    இன்றும் நாளையும் இரண்டு கட்டமாக பேச்சுவார்த்தை நடைபெறுவதால் நாளை 73 தொழிற்சங்கங்கள் நடைபெற உள்ள நிலையில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி அ.தி.மு.க. தொழிற்சங்கத்தை சேர்ந்த கமலக்கண்ணன் மற்றும் தே.மு.தி.க. தொழிற்சங்க நிர்வாகிகள் கண்ணில் கருப்பு துணி கட்டியவாறு கூட்டத்தில் பங்கேற்றனர்.

    வெளிப்படைத்தன்மை இல்லாமல் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக குற்றச்சாட்டை முன்வைத்து கண்கட்டி வித்தை காட்டுவதாக, தெரிவித்து எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் பேச்சுவார்த்தையில் கலந்து கொண்டதால் சலசலப்பு ஏற்பட்டது.

    ×