என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதல்: மாணவன் பலி
Byமாலை மலர்23 July 2020 12:46 PM GMT (Updated: 23 July 2020 12:46 PM GMT)
செங்கோட்டை அருகே விபத்தில் மாணவன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
செங்கோட்டை:
செங்கோட்டை அருகே உள்ள தெற்குமேடு அருகில் இருக்கும் அங்கன்காலடி ஊரைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவருடைய மகன் சதீஷ் (வயது 18). இவர் தனியார் ஐ.டி.ஐ கல்லூரியில் படித்து வந்ததாக கூறப்படுகிறது. நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து புளியரை செல்வதற்காக மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டு இருந்தார். தாட்கோநகர் குரங்குநடை மெயின் ரோட்டில் வந்தபோது ரோட்டின் ஓரத்தில் நின்று கொண்டு இருந்த லாரி மீது மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த சதீஷ், ஆபத்தான நிலையில் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் சதீஷ் நேற்று காலையில் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து புளியரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். செங்கோட்டை இன்ஸ்பெக்டர் அரிகரன் விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X