search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கமல்ஹாசன்
    X
    கமல்ஹாசன்

    தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது - கமல்ஹாசன்

    பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது என பெரியார் சிலை அவமதிப்பு குறித்து கமல்ஹாசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
    சென்னை:

    கோவையில் பெரியார் சிலை அவமதிக்கப்பட்டதற்கு பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பாரத் சேனா அமைப்பு நிர்வாகி கைது செய்யப்பட்டுள்ளார்.

    இந்த நிலையில் நடிகரும், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவருமான கமல்ஹாசன் பெரியார் சிலை அவமதிப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் டுவிட்டரில் கூறியுள்ளதாவது:-


    ‘தன் நம்பிக்கைகளை பிறர் மேல் திணிக்காமல், பிறரைக் காயப்படுத்தாது இயைந்து வாழும் சமூகம் தான் அறிவார்ந்த, மேம்பட்ட சமூகம். இன்று நம்பிக்கைகளின் பெயரால் நடக்கும் வெறுப்பு அரசியலும், பிரிவினைவாதமும் நம் அடையாளமல்ல. பிரித்தாளும் சூழ்ச்சியால் தமிழர் மீது எந்தச் சாயமும் பூச முடியாது.’

    இவ்வாறு அவர் கூறியுள்ளார். 
    Next Story
    ×