என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலி
Byமாலை மலர்15 July 2020 7:16 AM GMT (Updated: 15 July 2020 7:16 AM GMT)
பெரம்பலூர் அருகே மோட்டார் சைக்கிள் மோதி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பெரம்பலூர்:
பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு செல்வதற்காக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கொண்டே கடந்து சென்றார். அப்போது அந்த வழியே ஒரு தனியார் ஷோரூமில் பணிபுரிந்துவரும், விக்ரவாண்டி தாலுகா பொண்ணங்குப்பம் ஆசூரை சேர்ந்த தமிழரசன் என்பவர் சென்ற மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தனை, 108 ஆம்புலன்சு வேனில் ஏற்றி பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோவிந்தனின் மகன் ராமச்சந்திரன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
பெரம்பலூரை அடுத்த எளம்பலூர் எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் கோவிந்தன்(வயது 60). கூலித்தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் கூலி வேலைக்கு செல்வதற்காக திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையை நடந்து கொண்டே கடந்து சென்றார். அப்போது அந்த வழியே ஒரு தனியார் ஷோரூமில் பணிபுரிந்துவரும், விக்ரவாண்டி தாலுகா பொண்ணங்குப்பம் ஆசூரை சேர்ந்த தமிழரசன் என்பவர் சென்ற மோட்டார் சைக்கிள் கோவிந்தன் மீது வேகமாக மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த கோவிந்தனை, 108 ஆம்புலன்சு வேனில் ஏற்றி பெரம்பலூர் அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்பு மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று முன்தினம் மாலை உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து கோவிந்தனின் மகன் ராமச்சந்திரன் பெரம்பலூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் பெரம்பலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்பையா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X