search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சிக்னல்
    X
    சிக்னல்

    கொரோனா தடுப்பு நடவடிக்கை- சென்னையில் சிக்னல் நேரம் குறைப்பு

    சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிக்னல்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க காத்திருக்கும் நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    சென்னை:

    கொரோனா பரவலை தடுக்கும் விதமாக தமிழகத்தில் வருகிற 31-ந்தேதி வரை ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது.

    அதன்படி கொரோனா தடுப்பு நடவடிக்கையாக சிக்னல்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க காத்திருக்கும் நேரத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    சாலையில் வாகனங்கள் நிற்கும்போது கொரோனா பரவாமல் தடுக்க சிக்னல்களில் காத்திருப்பு நேரத்தை குறைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக 10 முக்கிய சிக்னல்களில் வாகனங்களில் காத்திருப்பு நேரம் 60 நொடியாக குறைக்க டிராபிக் போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
    Next Story
    ×