என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மார்த்தாண்டத்தில் லாரி மோதி ஒருவர் பலி
Byமாலை மலர்4 July 2020 4:04 PM GMT (Updated: 4 July 2020 4:04 PM GMT)
மார்த்தாண்டத்தில் லாரி மோதி ஒருவர் பலியான சம்பவம் தொடர்பாக மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
குழித்துறை:
மார்த்தாண்டம் அருகே பாகோடு கண்ணன்விளையை சேர்ந்தவர் அனிஷ் (வயது 22). இவர் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அனிஷ் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்று கொண்டு இருந்தார். பின்னால் பாறசாலை இஞ்சிவிளை புதுவல்பிலாவிளையை சேர்ந்த ரகீம் (50) என்பவர் உட்கார்ந்து பயணம் செய்தார். மார்த்தாண்டம் மேம்பாலம் சந்திப்பில் செல்லும் போது, பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த அனிஷ், ரகீம் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ரகீம் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த அருள்தாஸ் (54) என்பவர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
மார்த்தாண்டம் அருகே பாகோடு கண்ணன்விளையை சேர்ந்தவர் அனிஷ் (வயது 22). இவர் மார்த்தாண்டம் பம்மத்தில் உள்ள ஒரு ஒர்க்ஷாப்பில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு அனிஷ் மோட்டார் சைக்கிளில் மார்த்தாண்டத்தில் இருந்து களியக்காவிளை நோக்கி சென்று கொண்டு இருந்தார். பின்னால் பாறசாலை இஞ்சிவிளை புதுவல்பிலாவிளையை சேர்ந்த ரகீம் (50) என்பவர் உட்கார்ந்து பயணம் செய்தார். மார்த்தாண்டம் மேம்பாலம் சந்திப்பில் செல்லும் போது, பின்னால் வந்த லாரி மோதியது. இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்த அனிஷ், ரகீம் ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை மார்த்தாண்டத்தில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் ரகீம் நேற்று பரிதாபமாக இறந்தார்.
இந்த விபத்து குறித்து மார்த்தாண்டம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் படந்தாலுமூடு பகுதியை சேர்ந்த அருள்தாஸ் (54) என்பவர் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X