search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வெறிச்சோடிய சாலை
    X
    வெறிச்சோடிய சாலை

    மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு முடக்கம் நீட்டிப்பு - முதலமைச்சர் உத்தரவு

    கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் நிலையில் மதுரை மாநகராட்சி பகுதிகளில் மேலும் 7 நாட்களுக்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
    மதுரை:

    தமிழகத்தில் மற்ற மாவட்டங்களை விட சென்னையில்தான் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே செல்கிறது. இதனால் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது மற்ற மாவட்டங்களிலும் கொரோனா தொற்று அதிகரித்த வண்ணம் உள்ளது.

    மதுரை மாவட்டத்திலும் கொரோனா பாதிப்பு அதிகமாகி வருகிறது. இதனால் 

    இந்நிலையில், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் மதுரையில் மேலும் 7 நாட்களுக்கு முழு பொது முடக்கம் நீட்டிக்கப்படுகிறது என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    முழு முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகளில் அத்தியாவசியபணிகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

    முழு பொதுமுடக்கம் மதுரை மாநகராட்சி பகுதிகள், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு ஊரகப்பகுதிகள், திருப்பரங்குன்றம் ஆகிய பகுதியில் அமல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Next Story
    ×