search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருப்பூரில் 1½ கிலோ கஞ்சாவுடன் 2 பேர் கைது

    திருப்பூரில் 1½ கிலோ கஞ்சாவுடன் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருப்பூர்:

    திருப்பூர் வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன் மற்றும் போலீசார் நேற்று மாலை மாஸ்கோ நகர் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கு இடமாக வந்த 2 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் வைத்திருந்த பையில் கஞ்சா இருப்பது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அவர்கள் 2 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு வந்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த முருகன் (வயசு 48 ),தேனி பெரிய குளத்தை சேர்ந்த முருகன் (36) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 500 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்து வடக்கு போலீசார் வழக்குப் பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.
    Next Story
    ×