என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜெ.அன்பழகன் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இரங்கல்
Byமாலை மலர்10 Jun 2020 6:12 AM GMT (Updated: 10 Jun 2020 6:12 AM GMT)
திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ. பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
சென்னை:
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை 8.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். கொரோனாவுக்கு தமிழகத்தில் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
ஜெ.அன்பழகன் மறைவிற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கனிமொழி எம்.பி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
திமுக எம்.எல்.ஏ. ஜெ.அன்பழகன் மூச்சுத்திணறல் காரணமாக கடந்த 2-ந்தேதி குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதியானது.
இதனையடுத்து, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் இன்று காலை 8.05 மணியளவில் சிகிச்சை பலனின்றி காலமானார். கொரோனாவுக்கு தமிழகத்தில் எம்எல்ஏ ஒருவர் உயிரிழந்தது இதுவே முதல் முறையாகும்.
இந்நிலையில் சென்னை மேற்கு மாவட்ட திமுக செயலாளர் ஜெ.அன்பழகன் மறைவுக்கு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் இரங்கல் தெரிவித்துள்ளார்.
மு.க.ஸ்டாலினை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தனது இரங்கலைத் தெரிவித்தார்.
ஜெ.அன்பழகன் மறைவிற்கு புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, கனிமொழி எம்.பி, த.மா.கா., தலைவர் ஜி.கே.வாசன், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார், அமமுக பொதுச் செயலாளர் தினகரன், தமிழக பாஜக தலைவர் முருகன் ஆகியோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X