search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    திருவள்ளூர் அருகே மணல் கடத்தல்- 3 பேர் கைது

    திருவள்ளூர் அருகே மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
    திருவள்ளூர்:

    திருவள்ளூரை அடுத்த மப்பேடு போலீசார் நேற்று முன் தினம் பேரம்பாக்கம் பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வாகனங்களில் மணல் கடத்தி வந்த பேரம்பாக்கத்தை சேர்ந்த பார்த்திபன் (வயது 32), விஜயகுமார் (23) சந்துரு (19 )ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து லாரி, ஒரு டிராக்டர், இரண்டு மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்த போலீசார் தப்பியோடிய 3 பேரை தேடி வருகின்றனர்.
    Next Story
    ×