என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கடையநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி
நெல்லை:
தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 79). இவரது மகன் முத்துராஜ் (30). இவர்கள் இருவரும் சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வந்தனர். வீட்டிற்கு அருகே உள்ள டிராக்டர் செட்டில் தண்ணீர் ஏற்றும் மின்மோட்டாரையும் வைத்துள்ளனர்.
நேற்று இரவு மின்மோட்டார் போடுவதற்காக முத்துராஜ் அந்த அறைக்கு சென்றார். அப்போது மின்வயர் அறுந்து கிடந்துள்ளது. அதை தெரியாமல் மிதித்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். மோட்டார் போடச் சென்ற மகன் நீண்ட நேரமாக வராததால் அவரது தந்தை சுப்பையா மகனை தேடி மின்மோட்டார் உள்ள அறைக்கு சென்றார். அங்கு பலியாகி கிடந்த மகனை தொட்டு எழுப்ப முயன்றார். இதில் அவர் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.
அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்களும் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு தந்தை-மகன் இருவரும் மின்சாரம் தாக்கி பலியாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மின்சப்ளை துண்டிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்