search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மின்சாரம் தாக்கி பலி
    X
    மின்சாரம் தாக்கி பலி

    கடையநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலி

    கடையநல்லூர் அருகே மின்சாரம் தாக்கி தந்தை-மகன் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    நெல்லை:

    தென்காசி மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் சுப்பையா (வயது 79). இவரது மகன் முத்துராஜ் (30). இவர்கள் இருவரும் சொந்தமாக டிராக்டர் வைத்து விவசாயம் செய்து வந்தனர். வீட்டிற்கு அருகே உள்ள டிராக்டர் செட்டில் தண்ணீர் ஏற்றும் மின்மோட்டாரையும் வைத்துள்ளனர்.

    நேற்று இரவு மின்மோட்டார் போடுவதற்காக முத்துராஜ் அந்த அறைக்கு சென்றார். அப்போது மின்வயர் அறுந்து கிடந்துள்ளது. அதை தெரியாமல் மிதித்த முத்துராஜ் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பலியானார். மோட்டார் போடச் சென்ற மகன் நீண்ட நேரமாக வராததால் அவரது தந்தை சுப்பையா மகனை தேடி மின்மோட்டார் உள்ள அறைக்கு சென்றார். அங்கு பலியாகி கிடந்த மகனை தொட்டு எழுப்ப முயன்றார். இதில் அவர் மீதும் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு உறவினர்களும் அந்த பகுதியை சேர்ந்தவர்களும் சம்பவ இடத்திற்கு சென்றனர். அங்கு தந்தை-மகன் இருவரும் மின்சாரம் தாக்கி பலியாகி கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக மின்சப்ளை துண்டிக்கப்பட்டது.

    சம்பவ இடத்திற்கு கடையநல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தன் மற்றும் போலீசார் விரைந்து சென்று அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    இதுதொடர்பாக கடையநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×