search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தமிழக அரசு
    X
    தமிழக அரசு

    வெளிநாட்டு பயணிகள் தமிழகத்திற்கு வந்தால் பிசிஆர் கட்டாயம்- தமிழக அரசு

    வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வந்தால் கொரோனாவை அறிய பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் விமான பயணத்துக்கான புதிய வழிகாட்டு நெறிமுறையை தெரிவித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:-

    * வெளிநாட்டிலிருந்து தமிழகத்துக்கு விமானத்தில் வந்தால் கொரோனாவை அறிய பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

    * வெளிநாடுகளில் இருந்து விமானங்களில் வருவோர் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர்.

    * விமானத்தில் பயணம் செய்யும், முன்பாகவே தமிழகத்தில் பயணிப்பதற்கான இ-பாஸ் கட்டாயம் பெற வேண்டும்.

    * தமிழகம் திரும்பும் அனைத்து பயணிகளுக்கும் தெர்மல் பரிசோதனை செய்யப்படும்.

    * மகாராஷ்டிரா, டெல்லி, குஜராத் மாநிலங்களில் இருந்து தமிழகத்திதக்கு வருவோருக்கு பிசிஆர் சோதனை கட்டாயம் செய்யப்பட வேண்டும்.

    * வணிக பயன்பாட்டுக்காக 48 மணி நேரத்துக்குள் வெளிநாடு சென்று திரும்பியோர் தனிமைப்படுத்தப்படமாட்டார்கள்.

    இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    Next Story
    ×