என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஆர்எஸ் பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ்
Byமாலை மலர்29 May 2020 6:42 AM GMT (Updated: 29 May 2020 7:24 AM GMT)
திமுக அமைப்புச் செயலாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான ஆர்எஸ் பாரதிக்கு அரசு தலைமை வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை:
திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை அவமதிக்கும் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, அந்த நிகழ்ச்சியில் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு தலைமை வழக்கறிஞரிடம் வழக்கறிஞர் அந்தோணி ராஜ் மனு அளித்திருந்தார்.
ஆந்தோணிராஜின் மனுவை காணொலி மூலம் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் இன்று விசாரித்தார். பின்னர், இந்த மனு தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்கும்படி ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
திமுக அமைப்பு செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி, கடந்த பிப்ரவரி மாதம் அன்பகத்தில் கலைஞர் வாசகர் வட்டம் சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசியபோது, தாழ்த்தப்பட்ட சமுதாய மக்களை அவமதிக்கும் பேசியதாக சர்ச்சை எழுந்தது. இதுதொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் ஆர்.எஸ்.பாரதி கைது செய்யப்பட்டார். அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் அவர் இடைக்கால ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே, அந்த நிகழ்ச்சியில் நீதிபதிகளை அவமதிக்கும் வகையில் பேசியதாக ஆர்.எஸ்.பாரதிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர அனுமதி கேட்டு அரசு தலைமை வழக்கறிஞரிடம் வழக்கறிஞர் அந்தோணி ராஜ் மனு அளித்திருந்தார்.
ஆந்தோணிராஜின் மனுவை காணொலி மூலம் அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் இன்று விசாரித்தார். பின்னர், இந்த மனு தொடர்பாக 2 வாரத்தில் பதிலளிக்கும்படி ஆர்.எஸ்.பாரதிக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X