என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
வீடு புகுந்து பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு- 2 வாலிபர்கள் கைது
Byமாலை மலர்28 May 2020 8:38 AM GMT (Updated: 28 May 2020 8:38 AM GMT)
ஒரத்தநாடு அருகே வீடு புகுந்து பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
ஒரத்தநாடு:
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பொய்யுண்டார்கோட்டை கிராமம் வாண்டையார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஆர்த்தி (வயது 26). சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஆர்த்தியை மிரட்டி மர்ம நபர்கள் சுமார் மூன்றரை பவுன் தங்க சங்கிலியை அறுத்து சென்றனர். தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவரது மனைவி கிருபா ராணி என்பவரிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். டி.எஸ்.பி செங்கமல கண்ணன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரோந்து பணியில் இருந்தபோது 2 பேரை பிடித்து விசாரித்ததில், தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த நாதன் (25), வல்லம் அருகே உள்ள குருவாடிப்பட்டியை சேர்ந்த விஜயகாந்த் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நாதன், விஜயகாந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பொய்யுண்டார்கோட்டை கிராமம் வாண்டையார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஆர்த்தி (வயது 26). சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஆர்த்தியை மிரட்டி மர்ம நபர்கள் சுமார் மூன்றரை பவுன் தங்க சங்கிலியை அறுத்து சென்றனர். தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவரது மனைவி கிருபா ராணி என்பவரிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.
இந்த சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். டி.எஸ்.பி செங்கமல கண்ணன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ரோந்து பணியில் இருந்தபோது 2 பேரை பிடித்து விசாரித்ததில், தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த நாதன் (25), வல்லம் அருகே உள்ள குருவாடிப்பட்டியை சேர்ந்த விஜயகாந்த் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நாதன், விஜயகாந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X