search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    வீடு புகுந்து பெண்களிடம் 10 பவுன் நகை பறிப்பு- 2 வாலிபர்கள் கைது

    ஒரத்தநாடு அருகே வீடு புகுந்து பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
    ஒரத்தநாடு:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா பொய்யுண்டார்கோட்டை கிராமம் வாண்டையார் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி ஆர்த்தி (வயது 26). சம்பவத்தன்று வீட்டில் இருந்த ஆர்த்தியை மிரட்டி மர்ம நபர்கள் சுமார் மூன்றரை பவுன் தங்க சங்கிலியை அறுத்து சென்றனர். தொடர்ந்து அதே ஊரை சேர்ந்த கார்த்திக் என்பவரது மனைவி கிருபா ராணி என்பவரிடம் 7 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்றனர்.

    இந்த சம்பவம் குறித்து ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். டி.எஸ்.பி செங்கமல கண்ணன் தலைமையில் தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் கொள்ளையர்களை தேடும் பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது ரோந்து பணியில் இருந்தபோது 2 பேரை பிடித்து விசாரித்ததில், தஞ்சாவூர் மாவட்டம் சூரக்கோட்டை முருகன் கோவில் தெருவை சேர்ந்த நாதன் (25), வல்லம் அருகே உள்ள குருவாடிப்பட்டியை சேர்ந்த விஜயகாந்த் (24) என்பது தெரியவந்தது. மேலும் அவர்கள் நகை பறிப்பில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டனர். இதையடுத்து நாதன், விஜயகாந்த் ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    Next Story
    ×