என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
குடவாசல் அருகே கூரை வீடு எரிந்து சாம்பல்
குடவாசல்:
குடவாசல் அருகேயுள்ள சிமிழி பூங்காவூர், வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் ராமு மனைவி பரமேஸ்வரி. இவர் விவசாய கூலி தொழிலாளி. நேற்று இவர் பருத்தி வயலில் விவசாய வேலை செய்யவதற்காக சென்று விட்டார். அப்போது திடீரென இவரது வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் வீடு முழுவதும் எரிந்து சாம்பல் ஆனது.
இதுகுறித்து தகவல் அறிந்த குடவாசல் தீயணைப்பு துறையினர் வந்து தீயை அணைத்தனர். இருப்பினும் வீடு முழுவதும் எரிந்து சாம்பலானது. இதில் நெல்முட்டைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், டி.வி, பிரிட்ஜ், நகைகளும் எரிந்து விட்டதாக கூறப்படுகிறது. சேதமதிப்பு ரூ.2 லட்சம் இருக்கும் என தெரிகிறது.
இது பற்றி குடவாசல் தாசில்தார் பரஞ்சோதி, உதவி தாசில்தார் தேவேந்திரன், வருவாய் ஆய்வர் கணேசன் ஆகியோர் சென்று விசாரித்தனர். பாதிக்கபட்ட பரமேஸ்வரிக்கு தாசில்தார் ஆறுதல் கூறி அரசு நிவாரணமாக ரூ.5,000 மற்றும் 10 கிலோ அரிசி, வேட்டி, புடவை, ஆகியவற்றை வழங்கினர்.
மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிந்ததா? அல்லது வேறு ஏதும் காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்