search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கைது
    X
    கைது

    குனியமுத்தூரில் போலீஸ் ஏட்டுவை தாக்கிய வாலிபர் கைது

    கோவை குனியமுத்தூரில் விசாரணை நடத்த வந்த போலீஸ் ஏட்டுவை தாக்கிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

    கோவை:

    கோவை குனியமுத்தூர் அருகே உள்ள திருநகர் காலனியை சேர்ந்தவர் கோகுல் (வயது 35). இவருக்கு இவரது குடும்பத்தினருக்கும் இடையே குடும்ப பிரச்சினை ஏற்பட்டு உள்ளதாக குனியமுத்தூர் போலீசாருக்கு தகவல் வந்தது. 

    இதனையடுத்து குனியமுத்தூர் போலீஸ் நிலைய ஏட்டு வடிவேலன் என்பவர் விசாரணை நடத்துவதற்காக கோகுலின் வீட்டிற்கு சென்றார். விசாரணை நடத்தி கொண்டு இருந்த போது கோகுல் போலீஸ் ஏட்டு வடிவேலனை தகாத வார்த்தைகள் பேசி தாக்கினார். 

    இது குறித்து வடிவேலன் குனியமுத்தூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் ஏட்டுவை தாக்கிய கோகுல் மீது அரசு அதிகாரியை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    Next Story
    ×