search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புப்படம்
    X
    கோப்புப்படம்

    கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துவதற்கான வழிமுறைகள் வெளியீடு

    கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் குறித்த வழிமுறைகளை தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    தமிழக அரசு இன்று கொரோனா சோதனை மற்றும் தனிமைப்படுத்துதல் குறித்த வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அதில்,

    • ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்பவர்களில் அறிகுறி இருந்தால் மட்டுமே சோதனை.

    • மாவட்டம் விட்டு மாவட்டம் செல்பவர்கள் அனைவருமே 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    • அடுத்த மாநிலங்களில் இருந்து வருபவர்கள் அனைவருக்குமே கொரனா சோதனை செய்யப்படும்.

    •சோதனை உறுதி செய்யப்பட்டால் மருத்துவமனை, இல்லையெனில் 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள்.

    • வெளிமாவட்டம், வெளிமாநிலம், வெளிமாநிலங்களில் இருந்து வரக்கூடியவர்களில் உடனடியாக மருத்துவமனை செல்பவர்கள், கர்ப்பிணி பெண்கள், குடும்ப உறுப்பினர்களின் மறைவுக்கு வருபவர்கள், 75 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனிமைப்படுத்தப்படுவதிலிருந்து விலக்கு.

    இவ்வாறு அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகளில் கூறப்பட்டுள்ளது. 
    Next Story
    ×