என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழகத்தில் மே 7-ந்தேதி முதல் டாஸ்மாக் கடைகள் திறப்பு
Byமாலை மலர்4 May 2020 1:55 PM GMT (Updated: 4 May 2020 1:55 PM GMT)
டாஸ்மாக் கடைகள் வரும் 7-ந்தேதி முதல் திறக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
சென்னை:
அண்டை மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா ஆகியவற்றில் மதுக்கடைகள் ஏற்கனவே திறக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை வரும் 7-ந்தேதி முதல் திறக்கப்படும். நோய்க் கட்டுப்பாட்டு பகுதிகளில் வெளியே உள்ள டாஸ்மாக் நிபந்தனைகளுக்குட்பட்டு திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. தடை செய்யப்படாத பகுதிகளில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மதுக்கடைகளில் ஒரே நேரத்த்தில் 5 பேருக்கு மேல் கூட அனுமதியில்லை. மதுக்கடைகளில் தனிநபர் இடைவெளி 6 அடி தூரமாக இருக்க வேண்டும். அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் தேவைக்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும். டாஸ்மாக்கில் தேவைக்கேற்ப கூடுதல் நபர்களை பணியமர்த்தி கூட்டம் சேர்வதை தவிர்க்க வேண்டும். டாஸ்மாக் கடைகளை திறக்க மட்டுமே அனுமதி, பார்களை திறக்க அனுமதியில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில் டாஸ்மாக் கடைகளை திறக்க அரசு முடிவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X