என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தமிழ்நாடு முழுவதும் கொரோனா பரவும் அபாய பகுதி - அரசு அறிவிப்பு
Byமாலை மலர்3 April 2020 2:37 AM GMT (Updated: 3 April 2020 2:37 AM GMT)
தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் பகுதி என பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை:
தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 62-ன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக கொரோனா வைரஸ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிவு 76-ன் படி தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் பொது சுகாதாரத்துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தெரிவிக்க தவறும் பட்சத்தில் அங்கீகாரம் / அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இந்த பொது அறிவிப்பானது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897-ன் கீழ் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவுரைகளை கடைப்பிடிக்க தவறுபவர்கள் மீது இந்த சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188-ன் கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்குள்ளாவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவும் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழக அரசின் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939, பிரிவு 62-ன் கீழ் பொது சுகாதாரத் துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டிய தொற்றுநோயாக கொரோனா வைரஸ் அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரிவு 76-ன் படி தமிழ்நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று பரவும் அபாயம் உள்ள பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வகங்கள், மருத்துவமனைகள் மற்றும் மருத்துவர்கள் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்களை உடனடியாக 24 மணி நேரத்திற்குள் பொது சுகாதாரத்துறைக்கு எழுத்துப்பூர்வமாக தெரிவிக்க வேண்டும்.
அவ்வாறு தெரிவிக்க தவறும் பட்சத்தில் அங்கீகாரம் / அனுமதி ரத்து செய்யப்படுவதுடன் சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படும்.
இந்த பொது அறிவிப்பானது தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் 1939 மற்றும் கொள்ளை நோய் சட்டம் 1897-ன் கீழ் கொடுக்கப்படுகிறது. இதுகுறித்து வெளியிடப்பட்ட அறிவுரைகளை கடைப்பிடிக்க தவறுபவர்கள் மீது இந்த சட்டங்களின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இந்திய தண்டனை சட்டத்தின் பிரிவு 188-ன் கீழ் 6 மாத சிறை தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டும் சேர்ந்த தண்டனைக்குள்ளாவார்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X