search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ்
    X
    கொரோனா வைரஸ்

    தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா - பாதிப்பு எண்ணிக்கை 124 ஆக அதிகரிப்பு

    தமிழகத்தில் மேலும் 50 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 124 ஆக அதிகரித்துள்ளது.
    சென்னை:

    இந்தியாவில் கடந்த சில தினங்களாக கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். 

    தமிழகத்தில் ஏற்கனவே 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருந்த நிலையில், இன்று மேலும் 50 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
     
    கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள 50 பேரும் டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்று திரும்பியவர்கள் என சுகாதாரத் துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். 
    Next Story
    ×