என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் மளிகை பொருட்கள் வீடுதேடி வரும் - தஞ்சை கலெக்டர் தகவல்
Byமாலை மலர்28 March 2020 10:34 AM GMT (Updated: 28 March 2020 10:34 AM GMT)
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக தொலைபேசியில் தகவல் தெரிவித்தால் மளிகை பொருட்கள் வீடுதேடி வரும் என தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் தெரிவித்துள்ளார்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழலில் மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வீட்டிலிருந்தே தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்து வீட்டுக்கே நேரடியாக கொண்டு வந்து விநியோகம் செய்ய சில மளிகைகடைகள் தயாராக உள்ளன. எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தே பெற்று பயன்பெறலாம்.
மேலும் பொதுமக்களுக்கு வீட்டுக்கே சென்று பொருட்களை விநியோகிக்க தயாராக உள்ள வணிக நிறுவனங்கள் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், பணியாளர்கள் ஆகியோர் உரிய அடையாள அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தஞ்சை மாவட்ட கலெக்டர் கோவிந்தராவ் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது:-
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில் பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரமுடியாத சூழலில் மளிகை பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை வாங்குவதற்கு வீட்டிலிருந்தே தொலைபேசி மூலமாக ஆர்டர் செய்து வீட்டுக்கே நேரடியாக கொண்டு வந்து விநியோகம் செய்ய சில மளிகைகடைகள் தயாராக உள்ளன. எனவே தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்கள் அத்தியாவசிய பொருட்களை வாங்க வெளியில் செல்லாமல் வீட்டிலிருந்தே பெற்று பயன்பெறலாம்.
மேலும் பொதுமக்களுக்கு வீட்டுக்கே சென்று பொருட்களை விநியோகிக்க தயாராக உள்ள வணிக நிறுவனங்கள் முறையாக பதிவு செய்து கொள்ள வேண்டும். பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள், பணியாளர்கள் ஆகியோர் உரிய அடையாள அட்டையை கலெக்டர் அலுவலகத்தில் விண்ணப்பித்து பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X