search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தஞ்சை கலெக்டர்"

    • தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் டி ஷர்ட் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது.
    • தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் இச்சுற்றுலாவை வழி நடத்தினார்.

    தஞ்சாவூர்:

    உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழுமம் சார்பில் கடந்த 25-ந் தேதி முதல் நேற்று 1-ந்தேதி வரை தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் சுற்றுலாப் பயணிகள் வரவேற்பு, தூய்மை பணி முகாம், சுற்றுலா விழிப்புணர்வு பேரணி, பாரம்பரிய நடை பயணம், கைவினைப் பொருள் செயல்முறை விளக்கம், சுற்றுலா கருத்தரங்கு, கோலப்போட்டி, புகைப்பட ப்போட்டி, ஓவியப்போட்டி, சிறப்பு கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடைபெற்றன.

    இந்நிலையில் நிறைவு நாளான நேற்று மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப், புதுக்குடி நரிக்குறவர் காலனியை சேர்ந்த பள்ளி செல்லும் மாணவ-மாணவிகள் 35 பேருக்கு இன்ப சுற்றுலா தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் ஏற்பாடு செய்திருந்தார். தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குடும்பம் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் டி ஷர்ட் மற்றும் தொப்பி வழங்கப்பட்டது. தஞ்சாவூர் பெரிய கோவில், ராஜாளி பறவைகள் பூங்கா, தஞ்சாவூர் அருங்காட்சியகம், 7டி திரையரங்கம் மற்றும் சிறுவர் தொடர்வண்டி பயணம் என குழந்தைகள் உற்சாகத்துடன் கண்டு களித்தனர். கலெக்டரின் சார்பில் அனைத்து குழந்தைகளுக்கும் தஞ்சை தாரகைகளின் ஒருங்கி ணைப்பாளர் மணி மேகலை தலா ஒரு ஜோடி தலையாட்டி பொம்மையை நினைவு பரிசாக வழங்கினார். தஞ்சாவூர் சுற்றுலா வளர்ச்சி குழும ஒருங்கிணைப்பாளர் முத்துக்குமார் இச்சுற்று லாவை வழி நடத்தினார்.

    • சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும்.
    • இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்ப

    தாவது:-

    2023 ஆம் ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருது வீர தீர செயல்புரிந்த பெண் ஒருவருக்கு வழங்கப்படவுள்ளது. சமூகத்தில் தானாக முன்வந்து தைரியமாகவும், துணிச்சலுடனும், நல்ல பல செயல்களை செய்திருக்க வேண்டும். மேற்படி நற்செயல்கள் செய்ததற்கான சான்று மற்றும் புகைப்படங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இவ்விருது சுதந்திர தினத்தன்று நடைபெறும் விழாவில் முதல்-அமைச்சரால் வழங்கப்படும்.

    இவ்விருது தொடர்பாக இணையதள முகவரியான https://awards.tn.gov. in- ல் வருகிற 30-ந் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அல்லது ஆப் லைனில் இருந்தால் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை உறுப்பினர் செயலர், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், ஜவஹர்லார் நேரு விளையாட்டரங்கம், ராஜா முத்தையா சாலை, பெரியமேடு, சென்னை-600 003. எனும் முகவரிக்கு தபால் மூலமாக எதிர்வரும் வரும் 28-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04362-235633 என்ற தொலைபேசி எண்ணிலும், 7401703496 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கூட்டம் நாளை (புதன்கிழமை) மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
    • மாற்று திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக வழங்கி பயன்பெறலாம்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தீபக்ஜேக்கப் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த மாற்று திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் நாளை (புதன்கிழமை) காலை 10.30 மணி அளவில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

    இதில் அனைத்து துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்வார்கள்.

    எனவே தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள மாற்று திறனாளிகள் தங்களது தேவைகளை கோரிக்கை மனுவாக வழங்கி பயன்பெறலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பல்லாங்குழி, சொக்கட்டான், ஆடு புலிஆட்டம், முதலான விளையாட்டுகள் நடைபெற உள்ளன.
    • பெயர்களை நாளை ( வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது :-

    "இல்லம் தேடிக்கல்வி" மற்றும் பள்ளிகளில் பயிலும் 13 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் தங்கள் கோடை விடுமுறையைப் பயனுள்ள வழிகளில் செலவிடத் தக்க வகையில், தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடை கால இலவசப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) முதல் 18-ந் தேதி ( வியாழக்கிழமை ) வரை நாள்தோறும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில், அழகிய கையெழுத்துப் பயிற்சி, ஓவியப் பயிற்சி முதலானவை இலவசமாக வழங்கப் பட உள்ளன. மேலும் பல்லாங்குழி, சொக்கட்டான், ஆடு புலிஆட்டம், பம்பரம் விடுதல், சிலம்பாட்டம், செஸ், சுண்டாட்டம், குதியாட்டம் (ஸ்கிப்பிங்) முதலான விளையாட்டுகள் நடைபெற உள்ளன.

    இம்முகாமில் பங்கேற்க விரும்பும் குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் பெயர், வயது, படிக்கும் வகுப்பு முதலான விவரங்களைத் தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில், நூலகரிடம் நேரிலோ அல்லது 99764 27038, 94448 60511 ஆகிய புலன (வாட்ஸ் ஆப்) எண்களிலோ, பதிவு செய்து கொள்ளலாம்.

    பங்கேற்கும் குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பெயர்களை நாளை ( வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    14 ஆம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை நூலக வாசிப்பு நடைபெறும். 15-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை வண்ணம் தீட்டுதல் நடைபெறும். இதையடுத்து 10.30 மணி முதல் 11.30 மணி வரை சதுரங்கம், ஸ்கிப்பிங் , 11.30 முதல் 12 மணி வரை நூலக வாசிப்பு நடைபெறும்.

    16-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை அழகிய கையெழுத்துப் போட்டி, 10 மணி முதல் 11 மணி வரை கேரம் பலகை, பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் நடைபெறும்.

    17-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை சிலம்பம், 10 மணி முதல் 11 மணி வரை கதைசொல்லல், ஓவியம் நடைபெறும்.

    18-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கோலாட்டம், கும்மி அதனைத் தொடர்ந்து 11 மணிக்கு மேல் நிறைவு விழா நடைபெறும். அப்போது சான்றிதழ் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இன்று மாலை தொடங்குகிறது
    • வரும் 11-ந் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு ஸ்ரீ தியாகராஜர் ஆராதனை விழா இன்று மாலை தொடங்குகிறது. இந்த விழா வருகிற 11-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு வரும் 11-ந் தேதி (புதன்கிழமை) அன்று ஒரு நாள் மட்டும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆணை வழங்கப்பட்டுள்ளது.

    மேலும் இந்த உள்ளூர் விடுமுறை நாளுக்கு பதிலாக 21.1.2023 (சனிக்கிழமை) தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் பணி நாளாக அறிவிக்கப்படுகிறது.

    இந்த உள்ளூர் விடுமுறை செலாவணி முறி சட்டம் 1881-ன் கீழ் வராது என்பதால் தஞ்சாவூர் மாவட்ட கருவூலம் மற்றும் தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து கிளை கருவூலங்களும் குறிப்பிட்ட பணிகளுடன் இயங்கும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    ×