என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பத்திரிகைகள் மூலம் கொரோனா பரவுமா?: உலக சுகாதார அமைப்பு விளக்கம்
Byமாலை மலர்26 March 2020 3:21 AM GMT (Updated: 26 March 2020 3:23 AM GMT)
பத்திரிகைகள் மூலம் கொரோனா பரவுமா? என்பது குறித்து உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்து உள்ளது.
சென்னை :
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், அதை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனா நோய்க்கிருமி ஒரு பொருளின் மேற்பரப்பில், குறிப்பிட்ட மணி நேரம் உயிருடன் இருக்கும். எனவே நாம் தொடும் எந்த பொருளின் வாயிலாகவும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளுக்கும், பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், பத்திரிகைகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா? என்று எழுந்துள்ள கேள்விக்கு, வர்த்தக பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்து உள்ளது.
“பத்திரிகை அச்சடித்து, கட்டுகளாக கட்டப்பட்டு மாறுபட்ட வெப்ப சூழ்நிலையில் வாகனத்தில் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. எனவே அதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு” என்று அந்த அமைப்பு கூறி இருக்கிறது.
உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா வைரஸ் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவிலும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்து இருப்பதால், அதை கட்டுப்படுத்த மத்திய-மாநில அரசுகள் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
கொரோனா நோய்க்கிருமி ஒரு பொருளின் மேற்பரப்பில், குறிப்பிட்ட மணி நேரம் உயிருடன் இருக்கும். எனவே நாம் தொடும் எந்த பொருளின் வாயிலாகவும் கொரோனா பரவ வாய்ப்பு உள்ளது.
கொரோனா பரவுவதை தடுக்க ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள போதிலும் அத்தியாவசிய சேவைகளுக்கும், பத்திரிகைகளுக்கும், தொலைக்காட்சிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில், பத்திரிகைகள் மூலம் கொரோனா வைரஸ் பரவுமா? என்று எழுந்துள்ள கேள்விக்கு, வர்த்தக பொருட்கள் மூலம் கொரோனா வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு குறைவு என்று உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்து உள்ளது.
“பத்திரிகை அச்சடித்து, கட்டுகளாக கட்டப்பட்டு மாறுபட்ட வெப்ப சூழ்நிலையில் வாகனத்தில் வெவ்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டு வினியோகம் செய்யப்படுகிறது. எனவே அதன் மூலம் இந்த வைரஸ் பரவுவதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு” என்று அந்த அமைப்பு கூறி இருக்கிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X