search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    தற்கொலை
    X
    தற்கொலை

    கத்தாரில் இருந்து வந்த கேரள தொழிலாளி பழனியில் தற்கொலை

    கத்தாரில் இருந்து வந்த கேரள தொழிலாளி பழனியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா பாதிப்பு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    பழனி:

    கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலைச்சேரியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 48). கத்தாரில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 21-ந்தேதி பழனிக்கு வந்த இவர், அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும்விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறை கதவு வெகு நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் உடனடியாக பழனி அடிவாரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர். 

    அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். விசாரணையில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இதுகுறித்து அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தற்கொலை செய்த மகேசுக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாம் என்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்பில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
    Next Story
    ×