என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கத்தாரில் இருந்து வந்த கேரள தொழிலாளி பழனியில் தற்கொலை
Byமாலை மலர்24 March 2020 1:52 PM GMT (Updated: 24 March 2020 1:52 PM GMT)
கத்தாரில் இருந்து வந்த கேரள தொழிலாளி பழனியில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். கொரோனா பாதிப்பு காரணமா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பழனி:
கேரள மாநிலம் கண்ணூர் மாவட்டம் தலைச்சேரியை சேர்ந்தவர் மகேஷ் (வயது 48). கத்தாரில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். கடந்த 21-ந்தேதி பழனிக்கு வந்த இவர், அடிவாரத்தில் உள்ள தனியார் தங்கும்விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் நேற்று அவர் தங்கியிருந்த அறை கதவு வெகு நேரமாகியும் திறக்கப்படாமல் இருந்தது. இதனால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் உடனடியாக பழனி அடிவாரம் போலீசுக்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அறையின் கதவை திறந்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு அவர் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தார். விசாரணையில் அவர் தூக்குப் போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பழனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். பின்னர் இதுகுறித்து அடிவாரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை செய்த மகேசுக்கு கொரோனா பாதிப்பு இருந்திருக்கலாம் என்றும் அதனால் ஏற்பட்ட பாதிப்பில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் எனவும் கூறப்படுகிறது. இது பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X